Skip to main content

ஊரடங்கு எதிரொலி: சேலத்தில் விண்ணை முட்டும் காய்கறி விலை!

Published on 01/05/2020 | Edited on 02/05/2020

 

Lockdown impact - Vegetable prices rise in Salem

 

கரோனா நோய் தொற்று அபாயத்தால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலை இழப்பு, வருவாய் இழப்பு என பலமுனை தாக்குதலில் சிக்கித் திணறுகின்றனர். காய்கறிகள், பழங்கள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விண்ணை முட்டும் விலையேற்றத்தால் மேலும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். 


கரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் சேலம் மாநகராட்சி பகுதிகளில் மட்டும் ஏப். 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஏப். 29 தேதி முதல் முழு ஊரடங்குக்கு முந்தைய நிலை அமலுக்கு வந்தது. என்றாலும், விளைபொருள்கள் விளையும் இடங்களில் இருந்து சந்தைக்கு வருவதில் தொய்வு ஏற்பட்டது.

இதனால் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. முழு ஊரடங்குக்கு முதல் நாள், சேலம் சந்தைகளில் நிலவிய காய்கறிகளின் விலை மே 1ம் தேதியன்று 30 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்து இருந்தன.

 

 


மே 1ம் தேதியன்று சேலத்தில் காய்கறிகளின் விலை விவரங்கள் வருமாறு (அடைப்புக்குள் ஏப். 24ம் தேதி விலை நிலவரம்):

கத்தரி ரூ.30 (20), கேரட் ரூ.60 (20), பீன்ஸ் ரூ.70 (40), பீர்க்கன் ரூ.35 (25), புடலை ரூ.30 (20), தக்காளி ரூ.20 (15), வெண்டை ரூ.30 (20), பச்சை மிளகாய் ரூ.40 (20), முட்டைக்கோஸ் ரூ.20 (10), பெரிய வெங்காயம் ரூ.30 (25), சின்ன வெங்காயம் ரூ.70 (60), பாகல் ரூ.30 (20), பீட்ரூட் ரூ.35 (25), வாழைக்காய் ரூ.10 (8), எலுமிச்சை பழம் ரூ.4 (3), வாழைப்பழம் ரூ.6 (4).

இந்த விலையேற்றம் ஒருபுறம் இருந்தாலும், மீண்டும் திடீரென்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து விடுவார்களோ என்ற ஐயத்தில் வழக்கத்தை விட கூடுதலாக காய்கறிகளை வாங்கினர்.

 


இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் கூறுகையில், ''ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே கடை போட அனுமதிக்கின்றனர். இதனால் 30 சதவீத வியாபாரம்தான் நடக்கிறது. 

சேலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் நான்கு நாள்களாக காய்கறி வரத்து அடியோடு முடங்கியது. 29ம் தேதி முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் போதிய அளவில் காய்கறிகள் சந்தைக்கு வரவில்லை. அதனால் இருப்பு வைக்கும் அளவுக்கு வியாபாரிகளுக்கும் காய்கறிகள், பழங்கள் கிடைக்கவில்லை. வரத்து குறைந்ததால்தான் காய்கறிகள், பழங்களின் விலை 30 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. வரத்து அதிகரித்தால் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது,'' என்றனர்.

 

 

 


மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரண கொடுத்தால் போதுமானது என்று மன நிம்மதி அடைந்துள்ள தமிழக அரசு, சந்தைகளில் அத்தியாவசிய பொருள்களின் விலைகள் தாறுமாறாக எகிறி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தட்டுப்பாடான சூழ்நிலையை வியாபாரிகள் லாப நோக்கத்துடன் இரட்டிப்பு விலை வைத்து விற்கும் போக்கும் நிலவுகிறது. விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும், அதேநேரம் அத்தியாவசிய பொருள்களின் சரக்கு போக்குவரத்தை சீர்படுத்தவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் விரைந்து செயலாற்ற வேண்டும். 

 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.