ADVERTISEMENT
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாளை மறுநாள் முதல் 30ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் சில பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் தமிழக தலைமை செயலாளர், சென்னை நகர காவல் எல்லையில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.
ADVERTISEMENT
அதேபோல் சுகாதாரத்துறை செயலாளர், மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் ஆகியோர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, பொது முடக்கம் தீவிரமாக நடைமுறைப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் முழு முடக்கம் அமலாக உள்ளது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கே சென்று ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Show comments