/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/temples44343.jpg)
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவையொட்டி, மதுரை மாவட்டத்திற்கு வரும் ஏப்ரல் 16- ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஸ்சேகர் இன்று (12/04/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மதுரை மாநகரில் வரும் ஏப்ரல் 16- ஆம் தேதி அன்று அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளவிருப்பதால், அன்றைய தினம் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறைத் தினமாக அறிவிக்கப்படுகிறது.
வரும் ஏப்ரல் 16- ஆம் தேதி அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும், வங்கிகளும் மற்றும் பொது மக்கள் அரசு பாதுகாப்பிற்கான அவரச அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)