Advertisment

உள்ளாட்சித் தேர்தல்: இதுவரை ரூ.33.90 லட்சம் பறிமுதல்!

jk

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இரண்டு வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும், இந்த விடுபட்ட மாவட்டங்களில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. எனவே இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழங்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

Advertisment

இந்நிலையில் வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் விடுபட்ட மாவட்டங்களில்உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், அதற்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தேர்தல்அறிவிப்புக்குப்பிறகு இந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற வாகன சோதனையில் முறையான ஆவணமின்றி இதுவரை 33.90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisment

Local bodies elections
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe