உள்ளாட்சி தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவிருக்கின்ற நிலையில் நாளை அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது.
நாளை காலை 11 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள மாநில தலைமை தேர்தல் ஆணைய அலுவகலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.