Skip to main content

ஒன்றிய துணைத் தலைவர் தேர்தல்... அ.தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

19 வார்டுகளைக் கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தின் அதிக வருமானம் கொண்டது கோவில்பட்டி யூனியன். இங்கே தி.மு.க. 8 அதன் கூட்டணி ஒன்றுடன் 9 வார்டுகளைக் கைப்பற்ற அ.தி.மு.க. 5 வார்டு அதன் கூட்டணிக் கட்சி 1 வார்டு, சுயேட்சைகள் 4 வார்டுகளில் வென்றனர்.
 

யூனியன் தலைவருக்கான தேர்தல், ஆரம்பத்தில் தேர்தல் அலுவலரின் உடல் நலக்குறைவால் நிறுத்தபட்டு, பின்பு ஜன 30ல் நடந்த மறைமுகத் தேர்தலில் அ.தி.மு.க.வின் கஸ்தூரி 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று யூனியன் தலைவியானார். அப்போதே இந்த அறிவிப்பு முறைகேடானது என்று கூறி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்த தொகுதி எம்.பி.யான கனிமொழியும் சாலைமறியலில் ஈடுபட்டார்.

local body election thoothukudi admk candidate win


தற்போது பிப். 4 அன்று துணைத்தலைவர் தேர்தல் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் நடந்தது. ஆரம்பத்தில் அ.தி.மு.க.வின் ஆதரவு கவுன்சிலர் உட்பட 11 பேர் வந்தனர். தி.மு.க. தரப்பிலோ 8 கவுன்சிலர்கள் வந்தனர். தேர்தல் அலுவலராக உமா சங்கர் நியமிக்கப்பட்டார் தேர்தல் நடத்தும் போது வழக்கப்படி கதவுகளை மூடிவிட்டு தேர்தல் நடத்துமாறு தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை ஏற்ற அதிகாரிகள் பூட்டப்பட்டு தேர்தலை நடத்தினர்.

local body election thoothukudi admk candidate win

துணைத்தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் 5- வது வார்டு கவுன்சிலர் சுந்தரேஸ்வரியும் அ.தி.மு.க. சார்பில் 13- வது வார்டு கவுன்சிலர் பழனிசாமியும் போட்டியிட்டனர். இதில் பழனிசாமிக்கு 10 வாக்குகளும், சுந்தரேஸ்வரிக்கு 9 வாக்குகளும் கிடைத்தன. பின்னர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க.வின் பழனிசாமி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.

local body election thoothukudi admk candidate win

ஆனால் செல்லாத வாக்கைக் கொண்டு அ.தி.மு.க. ஜெயித்ததாக அறிவித்ததை ஏற்க முடியாது என்று தி.மு.க.வினர் எதிர்த்ததுடன் தீர்மானத்தில் கையெழுத்துப் போடவும் மறுத்தவர்கள் செல்லாத வாக்கை அ.தி.மு.க.விற்குச் சாதகமாக்கி வெற்றி பெற்றதாக அறிவித்தனர் என்று புகார் கூறினர்.

local body election thoothukudi admk candidate win

நம்மிடம் பேசிய தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் முதலில் அவர்கள் பக்கம் 11 எண்ணிக்கை. எங்கள் தரப்பில் 8 மட்டுமே. வாக்கெடுப்பில் அவர்கள் தரப்பு கவுன்சிலர் ஒருவர் எங்களுக்கு வாக்களித்தார். எங்கள் பக்கம் 9 ஆனது. ஆனால் அவர்கள் பக்கமிருந்த 10 பேரில் ஒரு வாக்கு செல்லாத வாக்கானது. தேர்தல் அலுவலர் சரிசமம் என்று அறிவிக்காமல், அதை அ.தி.மு.க.விற்குச் சாதகமாக்கி வெற்றி பெற்றதாக அறிவித்ததைத் தான் நாங்கள் ஆட்சேபித்து அவரிடமே புகாரைக் கொடுத்திருக்கிறோம் என்றார். 


பின்னர் கவுன்சிலர்களோடு வெளியேறிய தி.மு.க.வினர் எட்டயபுரம் சாலையில் ஒன்றியச் செயலாளர் முருகேசன் கோவில்பட்டி ஒன்றியச் செயலாளர் கருணாநிதி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.