உள்ளாட்சித் தேர்தல் நடத்த ஆறு மாதம் அவகாசம் கேட்டு மனு!

local body election tamilnadu supreme court

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டியிருந்தது. மேலும், தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வாக்காளர் பட்டியலையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. நேற்று (03/09/2021) உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை நிர்ணயம் செய்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆணை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மேலும் ஆறு மாதம் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

local body election State Election Commission Supreme Court
இதையும் படியுங்கள்
Subscribe