Skip to main content

உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடியின் சாதி அரசியல் எடுபடுமா?

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

 

தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்க உள்ள நிலையில், 1996ஆம் ஆண்டு மேலவளவு உள்ளாட்சி தேர்தலின்போது மேலவளவு பொது தொகுதியாக இருந்ததை தனி தொகுதியாக மாற்றம் பெற்றதும் பட்டியல் சமூகத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் வெற்றி பெற்றார் என்ற ஒற்றைக் காரணத்திற்காக ஆதிக்க சாதியினர், முருகேசன் மற்றும் அவரது தம்பி உள்ளிட்ட 7 பேர் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அநியாயமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். 


 

அந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 13 பேரை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி நன்னடத்தை காரணமாக விடுதலை செய்தது அதிமுக அரசு. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் சாதிய அரசியலை கையில் எடுத்துள்ளாராம். அதற்குதான் இந்த முன் ஏற்பாடுகளாம்.
 

இதுதொடர்பாக விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு பேசுகையில், இந்த சமூகத்திற்கு வாழவே தகுதியில்லாத குற்றவாளிகளை வெளியில் விட்டால் மீண்டும் சமூக சீர்கேடுகள் நடைபெறும். சாதி ரீதியாக, மத ரீதியாக கும்பலாக கொலை செய்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அந்த வகையில் தர்மபுரி பஸ் எரிப்பும் அடங்கும். 
 

மேலூர் ஊராட்சி சென்னகரம்பட்டி அம்மாஞ்சி, வேலு கொலை வழக்கில் ராமர் பங்குண்டு அதேபோல இரட்டை ஆயுள் பெற்ற அப்படிப்பட்ட சமூக விரோதியை தான் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.


 
பொது தொகுதியை தனித்தொகுதியாக மாற்றினார்கள். அப்போது சாதிய ஆதிக்க அடக்குமுறையை கையில் எடுத்த விவகாரமே மேலவளவு பிரச்சினை. சாதிய ரீதியாக உள்ளவர்களை வெளியில் அனுப்பினால் பதற்றம் உண்டாகும். இது அரசு சட்டத்திற்கு எதிரானது. ஆகையால் இவர்களை அரசே நன்னடத்தை காரணமாக வெளியில் விடுவது மீண்டும் சாதிய ரீதியாக பதற்றம் ஏற்படுத்தி அதில் அரசியல் செய்யும் வேலையாக உள்ளது. அதேபோல அரசே சாதியத்தை தூண்டும் வகையில் இந்த விடுதலை உள்ளது என்றார்.
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வன்னியரசு எழுதிய ‘மோடி ஆட்சி இருண்ட காலத்தின் சாட்சி’ நூல் வெளியீட்டு விழா (படங்கள்)

Published on 28/02/2024 | Edited on 28/02/2024

 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு எழுதிய ‘மோடி ஆட்சி இருண்ட காலத்தின் சாட்சி’ எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று (27-02-24) மாலை 3 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நக்கீரன் ஆசிரியர் தலைமை தாங்கினார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி நூலினை வெளியிட்டு, திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாலர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை; 5 மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

West Bengal Local Government Elections inceident Repolling in 5 districts

 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்து தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். முன்னதாக, வேட்புமனுத் தாக்கலின் போது பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக மாறி 12 வயது சிறுவன் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர்.

 

இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் கடந்த சனிக்கிழமை (ஜூலை 08) ஒரேகட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார் 5 கோடியே 67 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று இருந்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் சுமார் 65 ஆயிரம் மத்திய காவல்படை போலீசாரும், 70 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

 

இருப்பினும் கூச்பெகார் என்ற பகுதியில் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே வாக்குச் சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் வாக்குச் சாவடியை சூறையாடினர். அதே பகுதியில் உள்ள மற்றொரு வாக்குப்பதிவு மையம் ஒன்றில் இருந்து வாக்குப் பெட்டியை இளைஞர் ஒருவர் தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவங்களும் நடைபெற்றது. மேலும், ஹூக்ளியில் உள்ள தம்சா வாக்குச் சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரண்டு வாக்குப் பெட்டிகளைக் குளத்தில் வீசினர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்தனர்.

 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட வன்முறையால் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் புருலியா, பிர்பூம், ஜல்பைகுரி, நதியா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள 697 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு இன்று  நடைபெற்று வருகிறது. காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேலும் பதற்றமான வாக்குப்பதிவு மையத்தில் மத்தியப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.