Skip to main content

தேர்தல் பிரச்சனை... தந்தையின் கழுத்தை நெரித்தவரின் காதை கடித்து துப்பிய மகன்!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

local body election pudukkottai incident

 

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமை (09.10.2021) நடந்தது. பல இடங்களில் இடைத்தேர்தல்களும் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில்தான் தனது ஆதரவாளருக்கு வாக்களிக்கவில்லை என்று கூறி தகராறு செய்து தாக்கியவரின் காதைக் கடித்து துப்பியுள்ளார் ஒரு இளைஞர்.

 

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள மாங்காடு ஊராட்சியில் சனிக்கிழமை இடைத்தேர்தல் நடந்தது. கீதா துரையரசன் (பூட்டுச்சாவி சின்னம்), ஜானகி செல்வராஜ் (ஆட்டோ சின்னம்). ஆகிய இருவரும் வேட்பாளராகப் போட்டியிட்டனர். சனிக்கிழமை நடந்த வாக்குப்பதிவில் 2,985 வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

இந்த நிலையில், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை மாங்காடு உசிலங்கொல்லை பகுதியைச் சேர்ந்த ரெங்கையன் மகன் குமரேசன் (வயது 40) என்பவர் விடங்கர் கோயில் அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த அதே ஊரில் உள்ள சுந்தரகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த விஜயசுந்தரம் (வயது 57) என்பவரிடம் “நீ ஆட்டோவுக்கு ஓட்டு போடாமல் பூட்டுச் சாவிக்கு ஏன் ஓட்டு போட்டாய்” என தகராறு செய்து, “ஆட்டோவுக்கு ஓட்டு போட்டிருந்தால் மாரியம்மன் கோயிலில் வந்து சத்தியம் செய்” என்று கூறி தகராறு செய்துள்ளார். 

 

தகராறு செய்ததுடன் விஜயசுந்தரம் கழுத்தையும், உயிர்நாடியையும் நெரித்தபோது தடுக்க வந்த விஜயசுந்தரம் மனைவி ராஜலெட்சுமி (வயது 50), மகன் சதீஷ் (வயதை 26) ஆகியோரையும் தாக்கியுள்ளார். தந்தையின் உயிர்நாடி கழுத்தை நெரிப்பதைப் பார்த்த மகன் சதீஷ் விலக்கிவிட முயன்றும் பயனளிக்காததால் குமரேசனின் காதைக் கடித்துத் துப்பியுள்ளார். தகராறு குறித்து அங்கு வந்த குமரேசன் தம்பி இளங்கதிருக்கும் காதில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.

 

காது துண்டான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று முதலுதவி சிகிச்சை பெற்ற நிலையில், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு துண்டான காதை இணைத்து தையல் போட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். குமரேசன் தம்பி இளங்கதிரும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

 

அதேபோல கழுத்து மற்றும் உயிர்நாடியில் நெரித்ததால் காயமடைந்த விஜயசுந்தரம் மற்றும் அவரது மனைவி ராஜலெட்சுமி ஆகியோர் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சதீஷ் லேசான காயத்துடன் உள்ளார்.

 

சம்பவம் குறித்து குமரேசன் கொடுத்துள்ள புகாரில், விடங்கர் கோயில் பக்கம் எனது பூந்தோட்டத்திற்கு சென்றபோது வழிமறித்த விஜயசுந்தரம் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர் வீடு கட்ட மணல் அள்ளியதை எப்படி காவல்துறையிடம் சொல்லலாம் என்று கூறி அடித்து காதை அறுத்துவிட்டதாக புகார் கொடுத்துள்ளார்.

 

அதேபோல விஜயசுந்தரம் கொடுத்த புகாரில், அவரது ஆதரவாளருக்கு ஓட்டு போடவில்லை என்று கூறி தன்னிடம் தகராறு செய்து கொலை செய்ய முன்றதால் அதனைத் தடுக்க வந்தவர்களையும் தாக்கினார். என்னைக் கொன்றுவிடுவாரோ என்று என் மகன் சதீஷ் குமரேசன் காதை கடித்துவிட்டதாக கூறியுள்ளார்.

 

போலீசார் விசாரணையில், குமரேசன் புகாரில் கூறியுள்ள பகுதியில் தோட்டம் இல்லை என்பதும் விஜயசுந்தரத்திடம் மணல் அள்ள மாட்டு வண்டியோ, வேறு வாகனங்களோ இல்லை என்பதும்  தெரியவந்துள்ளது. மேலும், விஜயசுந்தரத்திடம் தகராறு செய்யும் முன்பு இதேபோல ஓட்டு போட்டது குறித்து வேறு ஒருவருடன் தகராறு செய்ததும் தெரியவந்துள்ளது.

 

சம்பவம் குறித்து வடகாடு போலீசார் விசாரணை செய்துவருகின்றனர். தேர்தல் பிரச்சனையில் காதைக் கடித்துத் துப்பிய பிரச்சனை பரபரப்பாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.