Skip to main content

கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட நீர்த்தேக்கம் என்பதற்காக தூர்வாராமல் இருப்பதா?- தேர்தல் பிரச்சாரத்தில் ஐ.பி. ஆவேசம்..!

Published on 23/12/2019 | Edited on 23/12/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியம் மற்றும் திண்டுக்கல் ஒன்றிய பகுதிகளில் தி.மு.க. சார்பாக 19வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ரா.பத்மாவதி மற்றும் திண்டுக்கல் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 17வது வார்டில் தி.மு.க. சார்பாக போட்டியிடும் பா.சோபியாராணியை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், தி.மு.க மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. உறுப்பினருமான இ.பெரியசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

Local body Election-I. Periyasamy-Campaign

 



சிறுநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய இ.பெரியசாமி, "கலைஞர் ஆட்சியின் போது கடந்த 9 வருடங்களுக்கு முன்பு வெள்ளோடு மற்றும் அருகில் உள்ள ஊராட்சி மக்களின் நலன் கருதியும் இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் நலன் கருதியும் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞரி முயற்சியால் இப்பகுதியில் சிறுமலை அடிவாரத்தில் ஆணைவிழுந்தான் ஓடை மற்றும் ராமக்கல் ஓடை நீர்த்தேக்கம் கட்டப்பட்டது.

மழை பெய்யும்போது நீர்த்தேக்கத்தில் மழைநீர் தேங்கியதால் இப்பகுதி விவசாயிகள் நல்லமுறையில் விவசாயம் செய்து வந்துள்ளனர். கடந்த ஒன்பது வருடங்களாக அ.தி.மு.க. ஆட்சியில் இந்த நீர்த்தேக்கம் தூர்வாரப்படவில்லை. தற்போது தமிழகம் முழுவதும் 900 கோடியில் குடிமராமத்து பணி (தூர்வாரும் பணி) செய்த எடப்பாடி அரசு இந்த நீர்த்தேக்கத்தை மட்டும் தூர்வாரவில்லை. மாவட்டத்தில் உள்ள யாருக்கும் பயன்படாத குளம், குட்டைகளை கூட தூர்வாரி உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நான்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் கடிதம் மூலம் தமிழக முதல்வருக்கு இந்த நீர்த்தேக்கத்தை தூர்வார மனு கொடுக்க தயாராக உள்ளோம். தமிழக அரசு உடனடியாக இந்த நீர்த்தேக்க பகுதியை தூர்வாரி மழைத் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டும்.

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது சிறுபான்மையினர் நடத்தும் நர்சிங் கல்லூரிகளுக்கு தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அனுமதி வழங்கியதால் கிராமப்புற மாணவியரும் நர்சிங் கல்லூரியில் சேர்ந்து படித்ததால் இன்று அவர்களால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்க முடிகிறது. அதற்கு ஒரே காரணம் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் தான்.

சொத்துவரியை உயர்த்தும் போது, தி.மு.க. ஆட்சியின் போது ஒரு பைசா கூட வரியாக போடவில்லை. அதனால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்தார்கள். ஆனால் இப்போது எதற்கெடுத்தாலும் வரி, எங்கு திரும்பினாலும் வரி, இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். தமிழகத்தில் குறிப்பாக கிராமப்புற ஊராட்சிகள் மேன்மையடைய நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.

தேர்தல் பிரச்சாரத்தின் பொது ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் முருகேசன், திண்டுக்கல் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் பெருமாள்சாமி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி, வெள்ளொடு ஊராட்சி கழக செயலாளர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி சார்லஸ், சின்னாளபட்டி நகர முன்னாள் செயலாளர்கள் தி.சு.அறிவழகன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வி.எ.டி.பாஸ்கர், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜகணேஷ், சின்னாளபட்டி நகர பொருளாளர் எஸ்.ஆர்.முருகன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.