Skip to main content

ஒத்திவைக்கப்பட்ட ஒன்றிய சேர்மன் தேர்தல்... மீண்டும் நடத்த உயர் நீதிமன்றம் தடை...!

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

கடலூர் மாவட்டத்தில் மங்களூர், நல்லூர் ஆகிய இரு ஊராட்சி ஒன்றியங்களில் சேர்மன் பதவிக்கான மறைமுகத் தேர்தல் கடந்த 30ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் அன்று நல்லூர் ஒன்றியத்தின் தேர்தல் அதிகாரியாக இருந்த ரவிசங்கர் உடல்நிலை சரியில்லாமல் தேர்தல் நடத்த வராததால் அன்று தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.  மீண்டும் மறைமுகத் தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டு, அதன்படி  தேர்தல் அதிகாரி பிரபாகரன் தேர்தலை நடத்திவைத்தார்

Local body election - High Court

 



இதில் திமுக கூட்டணி சார்பில் வேப்பூர் கவுன்சிலர் துரைக்கண்ணு போட்டியிட்டார். அவர் எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாமக கவுன்சிலர் செல்வி ஆடியபாதம் போட்டியிட்டார். இதில் செல்வி ஆடிய பாதத்திற்கு ஆதரவாக 12 வாக்குகளும், திமுக துரைக்கண்ணுவுக்கு 9 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து தேர்தல் அதிகாரி பிரபாகரன் பாமக வேட்பாளர் செல்வி ஆடியபாதம் வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழ் வழங்கினார்.

நல்லூர் ஒன்றிய சேர்மன் பதவியை பிடிக்க எக்ஸ் ஒன்றிய சேர்மன் அதிமுக ராஜலட்சுமி கணவர் ஒ.செ. ராஜேந்திரன் துணையோடு கடும் முயற்சி செய்தார். ஆனால் பாமக தரப்பு முதல்வர் எடப்பாடி வரை சென்று பேசி நல்லூர் ஒன்றியத்தை பாமகவிற்கு ஒதுக்கி தரவேண்டுமென்று ஒப்புதல் பெறப்பட்டது. முதல்வரே நேரடியாக தலையிட்டு பாமகவிற்கு விட்டுக் கொடுக்கும்படி ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரனிடம் எடுத்துக் கூறியதாகவும் அதை அடுத்து ராஜேந்திரன் தரப்பு பாமகவுக்கு விட்டுக் கொடுத்தது என அதிமுக தொண்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

 



மேலும் 2011 முதல் 2016 வரை இங்கு ஒன்றிய சேர்மனாக தன் மனைவி ராஜலட்சுமி அமரவைத்து அதன்மூலம் தனது அரசியல் வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டார் ராஜேந்திரன் என்றும் மீண்டும் அவரை இங்கு ஒன்றிய சேர்மனாக ஆக்கினால் சரியாக இருக்காது என அந்தக் கட்சியில் உள்ள சிலர் கட்சி மேலிடம் வரை சென்று உள்குத்து அரசியல் செய்ததை அடுத்து ராஜேந்திரன் மனைவிக்கு சேர்மன் சீட்டு மறுக்கப்பட்டுள்ளது என்றும் பேசப்படுகிறது.

மங்களூர் ஒன்றியத்தில் மொத்தம் 24 கவுன்சிலர்கள். இதில் கடந்த 30ஆம் தேதி சேர்மன் பதவிக்கு மறைமுக தேர்தலை தேர்தல் அதிகாரி பிரபாகரன் நடத்தினார். அப்போது திமுக தரப்பில் பொடையூர் தொகுதி கவுன்சிலர் சுகுணா திமுக சார்பில் போட்டியிட்டார். அதிமுக சார்பில் வாகையூர் ஒன்றிய கவுன்சிலர் மலர்விழி  போட்டியிட்டார். இருவருக்கும் தலா12 வாக்குகள் என சமமாக கிடைத்தது. இதை அடுத்து தேர்தல் அதிகாரி பிரபாகர் குலுக்கல் முறையில் தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்தார். ஆனால் அதிமுக தரப்பில் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 

 

Local body election - High Court

 



இந்த நிலையில் முதல்வர் ஈபிஎஸ் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகிய இருவரையும் 14 கவுன்சிலர்கள் மெஜாரிட்டி உள்ளது என சென்னை வரை அழைத்துப்போய் காட்டி ஒப்புதல் பெற்றனர். மா.செ. அருண்மொழிதேவன் தலைமையில் இதை அடுத்து இன்று மீண்டும் மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் திமுக வேட்பாளர் சுகுணா திமுக எம்எல்ஏவும் மாவட்ட செயலாளர் கணேசன் மூலம் கட்சித் தலைமை வரை சென்று ஆலோசிக்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று மறைமுகத் தேர்தலுக்கு வரும் ஆறாம் தேதி வரை தடை உத்தரவு பெற்றுள்ளனர். இதுபற்றி கணேசன் நம்மிடம் "எங்களைப் பொருத்தவரை கடந்த 30ஆம் தேதி மறைமுகத் தேர்தல் முறையாக முடிக்கப்பட்டுவிட்டது. 

ஆனால் குலுக்கல் முறையில் சேர்மன் தேர்வு செய்வதை விட்டுவிட்டு கவுன்சிலர்களை வளைத்து எப்படியும் சேர்மன் பதவியை பிடிக்க அதிமுக தரப்பில் கடும் முயற்சி செய்கிறார்கள். அது தவறான முன்னுதாரணம் என்பதால் நீதிமன்றத்தை நாடி உள்ளோம். நீதிமன்றத்தின் மூலம் சரியான தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம்" என்கிறார். அதிமுக வேட்பாளர் மலர்விழி  இளங்கோவன் தவிப்பில் உள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.