Skip to main content

வாக்கு எண்ணிக்கை...திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவிற்கு ஏறுமுகம்..!

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

 

LOCAL BODY ELECTION-DMK LEADING IN DINDIGUL

 



இதில் கொடைக்கானல் ஒன்றியத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட பூங்கொடி 1-வது வார்டில் வெற்றி பெற்றார். இரண்டாவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராசிகா வெற்றி பெற்றார். ரெட்டியார்சத்திரம் 1வது வார்டு மணிகண்டன் சுயச்சை வெற்றி  பெற்றார். ரெட்டியார் ஒன்றியத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் விவேகானந்தன் வெற்றி பெற்றார்.

திண்டுக்கல் ஒன்றியத்தில் செட்டி நாயக்கன்பட்டியில் போட்டியிட்ட திமுக கூட்டணி (சிபிஎம்) வேட்பாளரான செல்வநாயகம் வெற்றி பெற்றார். ரெட்டியார் சத்திரம் ஒன்றிய  திமுக வேட்பாளரான நாகலட்சுமி வெற்றி பெற்றார். நான்காவது வார்டில் போட்டியிட்ட ராஜலட்சுமி வெற்றி  பெற்றார்.

தொப்பம்பட்டி ஒன்றியத்தில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. வேடசந்தூர், கல்வார்பட்டி ஒன்றியத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பெசிலி வெற்றி பெற்றார். இரண்டாவது வார்டில் அதிமுக செல்வராஜ் வெற்றி பெற்றார். மூன்றாவது வார்டில் சார்லஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். நான்காவது வார்டில் திமுக வேட்பாளரான பாக்கியலட்சுமி வெற்றி பெற்றார்.

அதுபோல் வத்தலகுண்டு ஒன்றியத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட பரமேஸ்வரி வெற்றி பெற்றார். கட்டகா மன்பட்டி ஒன்றியத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட பெனினா வெற்றி பெற்றார். ஆத்தூர் ஒன்றியத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஹேமலதா, சிந்தாமணி வெற்றி பெற்றனர். அது போல் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கையில்  பெரும்பாலான ஒன்றியங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.