Skip to main content

தேமுதிகவிடம் கெஞ்சும் பாமக... எதிர்ப்பு காட்டும் விஜயகாந்த் தொண்டர்கள்...!

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

மருத்துவர் ராமதாஸின் பாமகவும், நடிகர் விஜயகாந்த்தின் தேமுதிக வும் தமிழக அரசியல் களத்தில் எதிரும் புதிருமான கட்சி. விஜயகாந்த்தின் கட்சி ஆரம்பித்தபின்பு தான் வடதமிழகத்தில் பாமகவின் செல்வாக்கு பெரும் சரிவை சந்தித்தது. பாமகவில் இருந்த இளைஞர் பட்டாளம் அப்படியே தேமுதிகவுக்கு தாவியது.

 

Local body election - dmdk vs pmk

 



இது பாமக நிறுவனரையும், அக்கட்சியினரை கடுமையாக கோபமடைய செய்தது. இதனால் தேமுதிகவை கடுமையாக எதிர்க்க தொடங்கியது பாமக. வடமாவட்டத்தில் தேமுதிகவின் செல்வாக்கை குறைக்க, தேமுதிகவில் உள்ள தன் சாதி இளைஞர்களை குறிவைத்து பாமக களம்மிறங்கி அதில் 70 சதவித வெற்றியை பெற்றது. அக்கட்சியில் இருந்த தன் சாதி இளைஞர்களை இழுத்தது, புதியதாக யாரும் அந்த கட்சிக்குள் போய் சேரவிடாமல் பார்த்துக்கொண்டது.

2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமைத்த அதிமுக தலைமையிலான கூட்டணியில் எதிர்எதிர் கட்சிகளான பாமக, தேமுதிக இடம் பிடித்தது. அப்போதே பாமக, தேமுதிக இரண்டு கட்சிகளும் முரண்டுபட்டே இருந்தன. இரண்டு கட்சிகளின் தலைமைகளைப்போலவே, இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் இணைந்து செயல்படவில்லை.

 

 

தற்போது நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தலில் பாமகவுக்கு தந்த முக்கியத்தை கூட தேமுதிகவுக்கு அதிமுக தலைவர்கள் தரவில்லை. அதோடு, தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பாமக, சுயேட்சை வேட்பாளர்களை களம்மிறக்கியது. அதிமுகவும் அதற்கு சப்போட் செய்தது என்கிற குற்றச்சாட்டை தேமுதிக மாவட்ட நிர்வாகிகள், விஜயகாந்த் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவிடம் தெரிவித்தனர். தேர்தல் முடியட்டும் பார்த்துக்கலாம் எனச்சொல்லினர்.

வாக்குஎண்ணிக்கை முடிந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். போட்டியிட்ட சில இடங்களில் தேமுதிக வெற்றி பெற்று ஒன்றிய கவுன்சிலர்களாக உள்ளனர். அதன்படி திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்தில் 2 கவுன்சிலர்கள் தேமுதிகவை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

இந்த செங்கம் ஒன்றிய சேர்மன் பதவி தேமுதிகவுக்கு ஒதுக்கி தந்துள்ளது அதிமுக தலைமை. இந்த ஒன்றியத்தில் உள்ள 23 வார்டுகளில் திமுக 8, காங்கிரஸ் 1, சிபிஎம் 1 என இந்த கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4, பாமக 3, தேமுதிக 2 என 9 இடங்களில் மட்டும்மே வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்கள். சுயேட்சைகள் முடிவே சேர்மன் யார் என்பதை முடிவு செய்யும். சுயேட்சைகளிடம் பாமக பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. அதேபோல் திமுகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

 



இதேபோல் பாமகவுக்கு தெள்ளார் ஒன்றிய சேர்மன் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கும் தேமுதிக ஒரு கவுன்சிலர் பதவியை பிடித்துள்ளது. சேர்மன் பதவிக்கான தேர்தலில் பாமக வெற்றி பெற வேண்டும் என்றால் இந்த இரண்டு இடங்களில் தேமுதிகவின் ஆதரவு இருந்தால் மட்டும்மே வாய்ப்பு.

இந்நிலையில் பாமகவுக்கு எதிராக தேமுதிக முரண்டு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் வார்டு ஒதுக்கீட்டின்போதும், தேர்தல் களத்தின்போதும் எங்களுக்காக எந்த வேலையும் செய்யாத பாமகவுக்கு, எங்கள் கட்சி கவுன்சிலர்கள் ஏன் ஓட்டுப்போட வேண்டும் என கேள்வி எழுப்புகின்றனர் தேமுதிக மாவட்ட நிர்வாகிகள்.

தேமுதிகவை அழிப்பது என்கிற குறிக்கோளில் உள்ள பாமகவுக்கு நாம் உதவி செய்யக்கூடாது என்கிற குரல்கள் தேமுதிக தரப்பில் இருந்து எழுந்துள்ளது. இந்த எதிர்ப்பால் என்ன செய்வது எனத்தெரியாமல் பாமக மாவட்ட நிர்வாகிகள் நொந்துப்போய்வுள்ளார்கள் என கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“16 அடி இல்லை 32 அடி கூட பாய்வேன்” - விஜய பிரபாகரன் அதிரடி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMDK candidate Vijaya Prabhakaran speech at election campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில் முதன்முதலாக தேர்தல் களத்தை சந்திக்கிறார் விஜயகாந்தின் வாரிசான விஜய பிரபாகரன். தே.மு.தி.க சார்பில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் விஜய பிரபாகரன் பேசியதாவது, “விஜயகாந்த் உடைய தைரியம் எனக்கும் இருக்கிறது. அது ரத்தத்திலே எங்க அப்பா எனக்கு கொடுத்தது. ஆனால், அந்த தைரியத்தை வைத்து மட்டும் இந்த தேர்தலை என்னால் சந்திக்க முடியாது. அந்த தைரியத்தை மக்களாகிய நீங்கள் முரசு சின்னத்தில் வாக்களிப்பதன் மூலம் கொடுக்க வேண்டும்.

மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட வேண்டும் என்று எங்க அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். நிச்சயம் இந்த விருதுநகர் மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட நான் தயாராக இருக்கிறேன். உங்க வீட்டில் இருக்கிற பசங்க வயசுதான் எனக்கும் இருக்கிறது. எனக்கும் பல ஆசைகள் இருக்கிறது, ஆனாலும் அதை எல்லாம் ஓரம் கட்டி ஒதுக்கி வைத்துவிட்டு எங்க அப்பாவோட கனவை நிறைவேற்றவும், எங்க கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் இந்த மக்கள் முன்னாடி நான் வந்து நிற்கிறேன் என்றால் மக்களுக்கு நீங்கள் எனக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.

அதேபோல், இளைஞர்கள் பலரும் எத்தனையோ வாய்ப்பு தேடி சுற்றிக் கொண்டிருப்பார்கள். அந்த மாதிரி என் தந்தை தாய் ஸ்தானத்தில் இருக்கின்ற மக்கள் ஆகிய உங்களிடம் ஒரு வாய்ப்பை தருமாறு கேட்கிறேன். ஏனென்றால், வாய்ப்பு கொடுத்தால் தான் நாங்கள் என்ன செய்வோம் என்று உங்களுக்கு தெரியும். இரண்டு முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து பத்து ஆண்டுகளாக எம்.பியாக ஆக்கி அவரை பார்த்தீர்கள். ஆனால், அவரது முகம் கூட பலருக்கும் தெரியாது. ஏன் அவர் பெயர் கூட யாருக்கும் தெரியாது.

எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர் விஜயகாந்த். இரண்டு தலைவர்களுமே, தன் சொந்த பணத்தை மக்களுக்கு செலவு செய்த தலைவர்கள். அந்த வழியில் வந்தவர்கள் தான் அ.தி.மு.க- தே.தி.மு.க கூட்டணியும். ‘புலி 8 அடி பயந்தால் குட்டி 16 அடி பாயும்’ என்று சொல்வார்கள். நான் ஆணவத்தில் பேசவில்லை, எங்க அப்பாவோட ஆசை நிறைவேற்றுவதற்கு 16 அடி இல்லை 32 அடி கூட பாய்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் அந்த வாய்ப்பை கொடுத்தால் தான் அதை நிரூபிக்க முடியும். விஜயகாந்த் புதைக்கப்படவில்லை கோடிக்கணக்கான மக்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ளார். இன்றைக்கு எம்ஜிஆர் மறைவு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பெருசா பேசப்படுவது விஜயகாந்தினுடைய மறைவு மட்டும் தான்

யூடியூப், ரீல்ஸ் போன்றவற்றை பார்த்து, இளைஞர்களாகிய நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள். இந்தத் தொகுதியிலேயே தங்கி உங்களுக்கு செய்ய நான் தயாராக இருக்கிறேன். துளசி கூட வாசம் மாறும், ஆனால் தவசி வார்த்தை மாறவே மாறாது. சொன்னா சொன்னதுதான். நிச்சயமாக உங்களுக்கு சேவை செய்ய  தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.