Skip to main content

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று விறுவிறு வாக்குப்பதிவு...!

Published on 31/12/2019 | Edited on 31/12/2019

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல்  இரண்டு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து முதல் கட்ட தேர்தல் கடந்த 27ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று (டிசம்பர் 30) தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

 

Local body election-Dindigul

 



திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்தநிலையில், மீதி உள்ள குஜிலியம்பாறை, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், பழனி, தொப்பம்பட்டி, வேடசந்தூர், வடமதுரை ஆகிய ஏழு ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் வார்டு உறுப்பினர்களுக்கு வெள்ளை நிற ஸ்லிப்பும், ஊராட்சித் தலைவருக்கு இளஞ்சிவப்பு நிற ஸ்லிப்பும், ஒன்றிய கவுன்சிலருக்கு பச்சை நிற ஸ்லிப்பும், மாவட்ட கவுன்சிலருக்கு மஞ்சள நிற ஸ்லிப் என ஓட்டுச்சீட்டுக்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதின் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தலைக்கு நான்கு ஓட்டுக்கள் வீதம் செலுத்தினார்கள்.

இந்த ஏழு ஒன்றியங்களும் கிராம பகுதி என்பதால் அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் ஆர்வத்துடனே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து சென்றனர். இதில் மதியம் 3 மணி நிலவரப்படி ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் 60சதவிகிதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. அதுபோல் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் 70 சதவிகித ஓட்டுக்களும், வேடசந்தூர் ஒன்றியத்தில் 57 சதவிகித ஓட்டுக்களும், குஜிலியம்பாறை ஒன்றியத்தில் 60 சதவிகித ஓட்டுக்களும், வடமதுரை ஒன்றியத்தில் 60 சதவிகித ஓட்டுக்களும், கொடைக்கானல் ஒன்றியத்தில் 61 சதவிகித ஓட்டுக்களும் பதிவாகியது.

 

Local body election-Dindigul

 



அந்த அளவுக்கு வாக்காள மக்கள் ஒவ்வொரு பகுதியில் உள்ள பூத்துகளில் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்தநிலையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்ட செயலாளருமான கொறடா சக்கரபாணியின் சொந்த ஊர் கள்ளிமந்தையம் என்பதால் அந்த ஊரில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

அதுபோல் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி தனது சொந்த ஊரான ஜவ்வாதுபட்டியில் உள்ள அரசு பள்ளியில் வாக்களித்தார். அதைத் தொடர்ந்து ஏழு ஒன்றியத்தில் உள்ள வாக்காள மக்களும் தொடர்ந்து வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் ஒட்டன்சத்திரம் ஒன்றியம், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் தான் அதிக வாக்குகள் பதிவாகியது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.