Skip to main content

பரபரப்புகளுக்கு நடுவே நாளை உள்ளாட்சி தேர்தல்...!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

மறுவரையறை செய்யப்படாத மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களுக்கு வருகிற டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

 

Local body election begin tomorrow

 

 

ஏழு ஒன்றியங்களைக் கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கிராமங்களில் பரபரக்க தொடங்கியுள்ளது. ஊராட்சித் தலைவர் மற்றும் அதன் வார்டு கவுன்சிலர்களுக்கு கட்சி சின்னம் கிடையாது. வரையறை செய்த படி பொது சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். ஆனால் ஒன்றிய கவுன்சிலர், ஒன்றியத் தலைவர் மாவட்டக் கவுன்சிலர் தேர்வுகளுக்கு மட்டும் கட்சியின் சின்னம் ஒதுக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கட்சிகளின் ஒதுக்கீடு தவிர்த்து தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நிர்வாகத்தைக் கைப்பற்ற பெரும்பான்மையான இடங்களில் போட்டியிடுகிறது.

கிழக்கு மேற்கு என இரண்டு யூனியன்களைக் கொண்ட ஒட்டப்பிடாரம் யூனியனில் அ.தி.மு.க பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட்டாலும், தி.மு.க. தன் கூட்டணியான ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு சீட் பகிர்ந்தளித்துவிட்டு மேற்கு ஒன்றியத்தில் 10 இடங்களில் களம் கண்டுள்ளது. இதே போன்றதொரு பங்கீடுதான் 9 வார்டுகளைக் கொண்ட ஒட்டப்பிடாரத்தின் கிழக்கு ஒன்றியத்திலும் நடைபெற்று உள்ளது. தி.மு.க.வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களோ சேர்மன் பதவியைப் பிடிப்பதற்காக தேவையான கவுன்சிலர்களை வளைக்க வியூகமெடுத்துள்ளனர்.

 

Local body election begin tomorrow

 



அதே சமயம் இலைத்தரப்பு விளாத்திகுளம், புதூர், சாத்தான்குளம் ஒன்றியங்களின் தலைவர் பதவியைப் பிடிக்கும் வகையில் கவுன்சிலராக வேண்டுமென்பதற்காக, மாமனார், மருமகள், கணவன் இல்லையென்றால் மனைவி என இரட்டை வேட்பாளர்களை டெக்னிக்காகவே களமிறக்கியுள்ளது. இதனால் தேர்தல்களம் அனல் பறக்கிறது. இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அடுத்தகட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 30ஆம் தேதியன்று நடக்கிறது.

தேர்தல் தொடர்பாக கட்டுப்பாட்டு அறையில் 14 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவைகளில் பெரும்பான்மையான புகார்கள் சுவர் விளம்பரம் குறித்தவைதான். முதற்கட்ட தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு 25ம் தேதி மாலை 5 மணி முதல் வரும் 27ம் தேதி வரையிலும், 30ம் தேதி நடைபெறும் 2ம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு 28ம் தேதி மாலை 5 மணிமுதல் 30ம் தேதி மாலை 5 மணிவரையிலும் வாக்கு எண்ணிக்கை நாளான ஜன 2ம் தேதியும் ஊரகப் பகுதிகளில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.