தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகின்றது. முதல் கட்டத் தேர்தல் 27- ஆம் தேதி முடிவடைந்த நிலையில்,இன்று (30.12.2019) இரண்டாம் கட்ட தேர்தல் காலை 07.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது.தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 46, 639 ஊராட்சி உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று வாக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 03.00 மணி நிலவரப்படி 27 மாவட்டங்களில் 61.45% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் வாக்குச்சாவடி மையத்திற்கு மாலை 05.00 மணிக்குள் வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.