Skip to main content

வரும் 30ஆம் தேதி மீண்டும் தேர்தல் - பேரம்... ஆள் கடத்தல்... பராக்... பராக்...!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27 மாவட்டங்களில் நடைபெற்றது. பிறகு யூனியன் சேர்மேன், துணை தலைவர் மற்றும் கிராம பஞ்சாயத்து துணைதலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் சென்ற 11ந் தேதி நடைபெற்றது. இதில் எதிர்கட்சி மற்றும் சுயேச்சைகளை விலைக்கு வாங்கியும், ஆட்கடத்தலில் ஈடுபட்டதும் என பல முறைகேடுகள் நடந்தது. பல இடங்களில் மறைமுக தேர்தல் நிறுத்தப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. அப்படித்தான் ஈரோடு மாவட்டத்தில் சில இடங்கள் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. அவைகளுக்குத்தான் மறுதேர்தல் 30ந் தேதி நடக்க உள்ளது.

 

 local body election-admk-dmk

 



ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒன்றியக்குழு தலைவர், துணை தலைவர், பஞ்சாயத்து துணை தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் சென்ற 11ம் தேதி நடைபெற்றது. இதில், ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 6 வார்டுகளில்  அ.தி.மு.க  மூன்று , திமுக மூன்று வார்டுகள் என சமமாக வெற்றி பெற்றிருந்தனர். இதில் ஈரோடு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர் பதவியை யார் கைப்பற்றுவார்கள் என்று பரபரப்பான நிலை நிலவியது.

ஈரோடு  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடக்க இருந்தது. இதில் திமுக உறுப்பினர்கள் 3 பேரும் வாக்களிக்க அங்கு வந்திருந்தனர். ஆனால் அதிமுக உறுப்பினர்கள் மூன்று பேரையும் அ.தி.மு.க.நிர்வாகிகள் எங்கோ கடத்திச் சென்று விட்டதால் அவர்கள் மூவரும் வரவில்லை. இதனால்  மறைமுகத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதே போல் தூக்கநாய்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த தேர்தலில் வாக்குப்பெட்டியை அதிமுக உறுப்பினர் எடுத்து கொண்டு ஓடி விட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், சென்னிமலை ஊராட்சியில் கொடுமணல் மற்றும் புஞ்சை பாலத்தொழுவு பஞ்சாயத்து துணை தலைவர்களுக்கான மறைமுக தேர்தலும் பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் தூக்க நாய்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒன்றிய தலைவர், ஒன்றிய துணைதலைவர் பதவிகளுக்கும், அதேபோல் கொடுமணல் மற்றும் புஞ்சை பாலத்தொழுவு பஞ்சாயத்து துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகிற 30ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஒன்றிய தலைவர் மற்றும் பஞ்சாயத்து துணை தலைவர் பதவிக்கு காலை 10.30 மணிக்கும், ஒன்றிய துணை தலைவர் பதவிக்கு மதியம் 3 மணிக்கும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

 



ஈரோடு ஊராட்சி மற்றும் தூக்க நாய்கன்பாளையம் தலைவர் துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டு  வருகின்றனர். தூக்க நாய்கன்பாளையத்தில் மொத்தம் 11 கவுன்சிலர்கள், அதில் தி.மு.க. 7 இடங்களிலும், அ.தி.மு.க. 3 இடங்களிலும், சுயேச்சை ஒருடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் தி.மு.க. மூன்று பேரை வலைத்து விட்டதாகவும், ஈரோட்டில் மூன்றில் ஒரு தி.மு.க. கவுன்சிலரை அ.தி.மு.க. கவனித்து விட்டதாகவும் அ.தி.மு.க. அரசியல் வட்டாரம் கூறுகிறது.

தி.மு.க. வட்டாரம் புதுக்கோட்டையில் பறிகொடுத்தது போலபோனால் போகட்டும் போடா என்ற மனநிலையில் உள்ளது.இந்த மறைமுக தேர்தல் சென்ற முறை நடைபெறாமல் நிறுத்தப்பட்ட அல்லது ஒத்தி வைக்கப்பட்ட 27 மாவட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நடக்கிறது. ஆக ஆட்கடத்தல், பண பேரம், கட்சி தாவல் இப்போது தொடங்கி விட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.