Skip to main content

மர்ம காய்ச்சலுக்கு எல்கேஜி குழந்தை பலி; மருத்துவர்களும், அரசுமே காரணம்; குமுறும் உறவினர்கள்

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

சீர்காழி அருகே மர்ம காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையில் போதிய மருந்து வசதிகள் இல்லாததால் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்காவிற்கு உட்பட்ட மீனவர் கிராமமான பழையாரைச் சேர்ந்தவர் ரமேஷ். மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஹரிணி மூன்று வயதேயான அந்த குழந்தை அதே கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார்.

 

dengue fever

 

இந்தசூழலில் ஹரிணிக்கு காய்ச்சல் ஏற்பட்டு கடந்த இரண்டு நாட்களாக சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் மருத்துவர்கள் பற்றாக்குறை, அலட்சியம், என சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இரண்டு நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை ஹரிணிக்கு, எந்த குழந்தைகள் நல மருத்துவரும் வந்து பார்க்கவுமில்லை, சிகிச்சை அளிக்கவுமில்லை, அதோடு ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருத்துவர்களும் யாரும் வராததால் சிகிச்சை அளிக்க யாருமில்லை, செவிலியர் மட்டுமே அவ்வப்போது வந்து சிகிச்சை அளித்துள்ளார், ஆனாலும் சிகிச்சை பலினில்லாமல் ஹரிணி காய்ச்சலால் துடியாய் துடித்தவர் திங்கட்கிழமை காலை அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

" போதிய சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனை அலட்சியம் செய்ததால் எங்களின் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குமுறுகின்றனர்.

 

dengue fever


அவர்கள் மேலும் கூறுகையில்," ஹரிணிக்கு என்ன காய்ச்சல் என்று கூறாமல் இரண்டு நாட்களாக என்ன மருத்துவம் அளிக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்காமல் நோட்டு பேப்பரை கிழித்து அதில் சீல் வைத்து குழந்தை உயிரிழந்ததாக மருத்துவமனை மருத்துவர் சான்று அளித்துள்ளார். இறந்த குழந்தையை வீட்டிற்கு எடுத்து செல்ல கூட மருத்துவமனையில் அமரர் வாகனம் தரமால் தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுத்துவந்து பிஞ்சு குழந்தையின் உடலை எடுத்து வந்தோம். திருச்சி அருகே உள்ள திண்டுக்கல்லில் ஒரு குழந்தை குழாயில் விழுந்து இறந்தது, அந்த குழந்தையும் எங்கள் குழந்தைதான் ஆனாலும் சில ஆதங்கத்தைக்கூறிதான் ஆகவேண்டும்,  அந்த குழந்தையை மீட்க பலகோடி ஒதுக்கீடு செய்து தமிழக அமைச்சர்கள் முழுவதும் சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் கூடி நின்று சிதைந்துபோன உடலை அள்ளிக்கொடுத்தாங்க அதை நாங்கள் கண்ணீரோடு பார்த்து அழுதோம், ஆனால் நல்லபடியா விளையாடிய குழந்தை சாதாரண  காய்ச்சலால் சிகிச்சைக்கு அரசு மருத்துமனைக்கு அழைத்துவந்து பினமாக தூக்கிசெல்கிறோம், இவங்க உயிரெல்லாம் உயிரில்லையா, இதுபோல நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் எத்தனைக் குழந்தைகள், எவ்வளவுபேர் தவிக்கிறாங்க அவங்களுக்கு உரிய மருத்துவ வசதிசெய்துகொடுக்காத அரசு என்ன நல்ல அரசாக இருக்கமுடியும், எங்கள் குழந்தை ஹரிணி போயிடுச்சி இனி அவரை போல மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்துள்ள குழந்தைகளை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று பொறிந்து தள்ளினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.