Skip to main content

சாப்பாட்டில் பல்லி, கரப்பான் பூச்சி... அதிரடி நடவடிக்கை எடுத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்!

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

Lizard, cockroach in the food ... Food safety officials who took action

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பஸ் நிலையம் அருகே சரவணா என்ற பெயரில் ஒரு ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் நேற்று முன்தினம் உணவு சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இது தொடர்பாக விசாரணை நடத்திய விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுகந்தன் தலைமையிலான குழுவினர் மற்றும் சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சங்கராபுரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் ஆகியோர் சரவணா ஹோட்டலில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

 

அதன் பிறகு சுகாதாரமற்ற முறையில் உணவு சமைத்த காரணத்தினாலும் சமைத்த உணவை பாதுகாப்பில்லாமல் வைத்ததின் அடிப்படையில் அதில் பல்லி விழுந்து அதை சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை கண்டறிந்தனர். அதன் அடிப்படையில் அந்த ஓட்டலை 15 நாட்கள் மூட வேண்டும் பிறகு முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும் என உடல் உரிமையாளரிடம் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து நகரில் உள்ள ஒரு பிரியாணி கடையில் சோதனை செய்தனர்.

 

அங்கு பழைய இறைச்சி மற்றும் கரப்பான் பூச்சிகள் நிறைந்து கிடந்தது. இப்படி சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் கடை உரிமையாளர் முகமது கவுஸ் என்பவருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். அங்கிருந்த பழைய இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். சங்கராபுரம் பகுதியில் பொதுமக்கள் சாப்பிடும் ஓட்டல்களில் தரமற்ற முறையில் உணவுகளை சமைத்து பரிமாறப்படுவது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர். இது குறித்து பல ஓட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளனர். இந்த சம்பவம் சங்கராபுரம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.