Skip to main content

எழுத்தாளுமைகள் சங்கமித்துள்ள இலக்கிய திருவிழா....!

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் என்கிற அந்த சிறிய நகரத்தில் தமிழக இலக்கிய ஆளுமைகள் சங்கமித்துள்ள பண்பாட்டு திருவிழா தொடங்கியிருக்கிறது. ஆம், தமிழர்களின் அரசியல், ஆய்வு, மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு, தத்துவம், வாழ்வியல் கூறுகள் அணைத்திற்கும் கருத்தாளுமிக்க, தமிழோடு ஒன்றர கலந்த ஒரு வழிகாட்டி அமைப்புதான் "தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" பொதுவுடமை இயக்க தலைவர்களில் ஒருவராகவும் அறிஞர் பெருமக்களால் இன்றளவும் "இலக்கிய பேராசான்" என அழைக்கப்படும் ப.ஜீவானந்தம் அவர்களால் 1961ம் வருடம் தொடங்கப்பட்டது தான் இந்த பெருமன்றம். 

 

ஜெயகாந்தன், நா.வானமாமலை, தனுஷ்கோடி ராமசாமி, கவிஞர் ஹெச், ஜி.ரசூல் என  இந்த குடிலில் வளர்ந்த ஆளுமைகள் வரிசை ஏராளம். அப்படி ஜீவாவனந்தத்தால் தொடங்கப்பட்ட இந்த அறிவுசார் பெருமன்றத்தின் 60ஆம் ஆண்டு மற்றும் 12வது மாநில மாநாடுதான் 20ந் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. 20, 21, 22 என மூன்று நாட்கள் இம் மாநாடு நடைபெற உள்ளது. 20ந் தேதி காலை பறை இசையுடன் தொடங்கப்பட்ட இம்மாநாடு, தொடக்க நிகழ்வில் சி.பி.ஐ. மாநில செயலாளர் முத்தரசன், துணை செயலாளர்கள் திருப்பூர் சுப்பராயன் எம்.பி, மு.வீரபாண்டியன், தி.மு.க. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ.ஆர். ராமச்சந்திரன், காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ், த.மு.எ.ச. பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சன்யா, பெருமன்ற பொதுச் செயலாளர் பேராசிரியர் இரா.காமராசு உட்பட பலரும் கலந்து கொண்டனர். 


தொடர்ந்து மூன்று நாட்களும் கவியரங்கம், கருத்தரங்கம், ஆய்வரங்கம், திறனாய்வு, இந்திய அரசியல், உலக அரசியல் மற்றும் பண்பாட்டு தாக்கங்கள், சுற்றுச்சூழல், அறிவியல், விஞ்ஞானம், மார்க்சியத்தின் அடுத்த கட்டம், பண்பாட்டு தளம் செய்ய வேண்டியது என ஏராளமான தலைப்புகளில் அந்தந்த துறை சார்ந்த தமிழ் நாட்டின் அறிவு சார்ந்த ஆளுமைகள், படைப்பாளிகள் கலந்து கொண்டு திறனாய்வு மற்றும் ஆய்வு உரைகளை, கட்டுரைகளை வாசிக்க உள்ளனர். அதே துறைகளில் வல்லுனர்களாக உள்ளவர்கள் மதிப்பீடு உரைகளும் நிகழ்த்த உள்ளனர். 


இதற்கிடையே வெள்ளி, சனி இரு நாட்களும் இரவு முழுக்க கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. பெருமன்றத்தின் தலைவர்களில் ஒருவராக செயல்பட்டவரும், எழுத்தாளர் ஜெயகாந்தனின் கம்பீர தோற்றத்தின் மறு உருவமாக இருந்தவரும், மானுட மதிப்பை தன் இலக்கியத்தால் செதுக்கிய மறைந்த எழுத்தாளர், நாவலாசிரியர், தனுஷ்கோடி ராமசாமி அவர்கள் வாழ்ந்து மறைந்த அதே சாத்தூரில் அவர் நினைவை போற்றும் வகையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பெருமை மிகு மாநாடு சிறப்புடன் நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.