தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் நேர்காணல்,தொகுதிப் பங்கீடு என பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று (04.03.2021) அதிமுகவில் விருப்ப மனுஅளித்தவர்களிடம் ஒரே நாளில் அதிமுக தலைமை நேர்காணல் மேற்கொண்டது. இந்நிலையில் இன்று காலை முதல்அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தேர்தலில் போட்டியிடும்வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவதுகுறித்துமாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள்வெளியானநிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சிமன்றக் குழுவும் இடம்பெற்றுள்ளதால் இன்று அதிமுக சார்பில்முதற்கட்டவேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அதிமுகதொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.