Skip to main content

கள்ள சந்தையில் மது விற்பனை அமோகம் – கல்லாக்கட்டும் அதிகாரிகள்

Published on 15/05/2021 | Edited on 15/05/2021
Liquor sales on the counterfeit market

 

தமிழகத்தில் கரோனா நோய் தொற்று அதிகரித்ததால் தமிழக அரசு ஊரடங்கை அமுல்படுத்தியது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 8 மணி முதல் 12 மணிவரை மளிகை, காய்கறிகள், இறைச்சி கடைகள் திறந்திருக்க அனுமதி அளித்தது. அதேபோல் அரசு மதுபான கடைகளும் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டது.

 

ஆனால் ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்காமல் தொடர்ந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியதால் தமிழக அரசு ஊரடங்கை மேலும் வலுப்படுத்தியது. இன்று முதல் காலை 6 மணி முதல் 10 மணி வரை 4 மணி நேரம் மட்டும் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் திறக்கப்படும் என்றும், அரசு மதுபான கடைகள் முழுமையாக மூடப்படும் என்றும் உத்தரவிட்டது.

 

அதன்படி இன்று முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அரசு மதுபான கடைகள் முழுமையாக மூடப்பட்டதால், மதுகுடிப்பவர்கள் நிலை தற்போது கேள்விகுறியாகி உள்ளது. இதனால் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு மதுபான பாட்டில்களை வீடுகளிலும், சிறிய அளவிலான ஓட்டல்களிலும், வைத்து மறைமுகமாக விற்பனை செய்து வருகின்றனா்.

 

அதிலும் ஒரு குவாட்டர் விலை 125க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெளியே கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒரு குவாட்டர் விலை நகர பகுதியில் 350 ரூபாய் வரை விற்கபடுகிறது. அதிலும் நகர பகுதியில் ராமகிருஷ்ணா பாலம், கரூர் பைபாஸ் பாலம், உறையூா், கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

 

அதேபோல் புறநகா் பகுதியில் சமயபுரம், மேலவாளாடி, மண்ணச்சநல்லூர், பஞ்சப்பூர், உள்ளிட்ட புறநகா் பகுதிகளில் ஒரு குவாட்டர் விலை 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை செய்பவர்களும் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினரை சரி கட்டிவிட்டு, கல்லாக்கட்ட ஆரம்பித்துள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

மக்களவைத் தேர்தல்; மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Lok Sabha elections; Orders to close liquor shops!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.