Skip to main content

சேலம் சரகத்தில் ஒரே நாளில் 14 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை!

Published on 03/01/2019 | Edited on 03/01/2019

புத்தாண்டு தினத்தையொட்டி, சேலம் சரகத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் 14.25 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளது.

 

t
கோப்புப் படம்


சேலம் மாவட்டத்தில் 204 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, டிசம்பர் 31, 2018-ம் தேதியன்று ஒரே நாளில் 5.95 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆரம்பநிலை மது பிரியர்கள் பெரும்பாலும் பீர் வகை மதுபானங்களையே வாங்கிச் சென்றனர். 


நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 188 டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் 3.50 கோடி ரூபாய்க்கும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 54 டாஸ்மாக் கடைகள் மூலம் 1.80 கோடிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 115 டாஸ்மாக் கடைகள் மூலம் 3 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்துள்ளது.
 


புத்தாண்டு பிறப்பையொட்டி டிசம்பர் 31-ம் தேதி ஒரே நாளில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் சரகத்தில் 14.25 கோடிக்கு மதுபான விற்பனை நடந்துள்ளது.



இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஒவ்வொரு ஆண்டும் புது வருடப் பிறப்புக்கு முதல் நாளன்று மது விற்பனை வழக்கத்தைவிட அதிகமாகத்தான் இருக்கும். சேலம் மாவட்டத்தில் டிசம்பர் 31-ம் தேதியன்று மட்டும் 9,204 பெட்டிகள் பிராந்தி, ரம், விஸ்கி உள்ளிட்ட மது வகைகளும், 6,401 பெட்டிகள் பீர் வகைகளும் என மொத்தம் 5.95 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகம்,'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடவுள் பேரில் நடந்த மோசடி; சேலத்தில் சிக்கிய அதிகாரி

Published on 04/06/2023 | Edited on 04/06/2023

 

Fraud at the temple; Officer trapped in Salem

 

சேலத்தில், இந்து சமய அறநிலையத்துறை கோயிலுக்கு பூஜை பொருள்கள் வாங்கியதில் 12 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக பெண் செயல் அலுவலர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

 

சேலம் உடையாபட்டியில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கோவிந்தராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில், கடந்த 2008 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சசிகலா என்பவர் செயல் அலுவலராக பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில், பூஜை  பொருள்கள் வாங்கியதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறைக்கு புகார்கள் சென்றன. இந்த புகாரின் பேரில், கோவிந்தரராஜ பெருமாள் கோயிலில் குறிப்பிட்ட காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரவு, செலவு ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

 

கோயிலில் வார பூஜை, மாத பூஜை, வருட பூஜை நடத்தியதாகவும், இதற்காக அபிஷேக பொருள்கள், மாலை, அலங்கார பந்தல், அலங்கார விளக்குகள் அமைத்ததாகவும், பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்ததாகவும் போலி ஆவணங்கள் மூலம் 12 லட்சம் ரூபாய் முறைகேடு  செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அப்போதைய செயல் அலுவலரான சசிகலா மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம், இந்து சமய அறநிலையத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Next Story

ரயில் நிலையத்தில் காவல்துறையினர் மீட்ட தங்கமகள்; 3 மாத பெண் குழந்தைக்கு ஏற்பட்ட சோகம்

Published on 07/05/2023 | Edited on 07/05/2023

 

Girl child recovered by the police at the railway station; Tragedy of a 3-month-old baby girl

 

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரி (63) என்பவர் (03.05.2023) இரயிலுக்காக வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில் நிலையத்தில் நடை மேடை எண் ஒன்றில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் கைக் குழந்தையுடன் வந்த பெண்மணி ஒருவர், தனது 6 மாத பெண் குழந்தையைக் கொடுத்துவிட்டு சிறிது நேரம் பார்த்துக் கொள்ளும்படியும், ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவதாகவும் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் குழந்தையைக் கொடுத்த பெண் வராததால் பதற்றம் அடைந்த சுந்தரி காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள இரும்புப் பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

 

அதில் ஆறு மாத பெண் குழந்தையை மூதாட்டி சுந்தரியிடம் ஒப்படைத்துச் செல்லும் பெண்மணி வெளியில் காத்துக் கொண்டிருந்த தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வேக வேகமாக ஆட்டோவில் ஏறிச் சென்றுள்ளார். இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து காட்பாடி இரும்புப் பாதை காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தையை விட்டுச் சென்ற பெண்மணி மற்றும் அவரது கணவர் ஏறிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைக்கு ஆறு மாத குழந்தையை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைத்துள்ளனர். வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் கடந்த 3 ஆம் தேதி 3 மாத பெண் கைக்குழந்தையைப் பெற்ற தாயே அனாதையாக விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Girl child recovered by the police at the railway station; Tragedy of a 3-month-old baby girl

 

இதனைத் தொடர்ந்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தையை விட்டுச் சென்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். குழந்தையை விட்டுச் சென்ற, திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த குழந்தையின் பெற்றோர் விஜய் மற்றும் கலைச்செல்வியை 24 மணி நேரத்தில் வேலூர் காட்பாடி ரயில்வே காவல் நிலைய போலீசார் கண்டுபிடித்தனர்.

 

Girl child recovered by the police at the railway station; Tragedy of a 3-month-old baby girl

 

பெற்றோரை வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள காட்பாடி ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார், விஜய் மற்றும் கலைச்செல்விக்கு அறிவுரை கூறினர். குழந்தைக்கு சென்னை ரயில்வே எஸ்.பி பொன்ராமு தங்கமகள் எனப் பெயர் சூட்டினார். பின்னர் குழந்தையை வேலூர் குழந்தைகள் நலக் குழுமத்தில் போலீசார் ஒப்படைத்த நிலையில், குழந்தையின் பெற்றோரான விஜய் மற்றும் கலைச்செல்வியிடம் குழந்தைகள் நல குழுமத்தினர் விசாரணை நடத்தி காப்பகத்தில் ஒப்படைக்கலாமா அல்லது பெற்றோருடன் அனுப்பலாமா என முடிவு செய்வார்கள் என இன்ஸ்பெக்டர் சித்ரா தெரிவித்துள்ளார்.