Skip to main content

'குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான்' - விஜய பிரபாகரன் பேச்சு!

Published on 05/09/2022 | Edited on 05/09/2022

 

'A lion is a lion even in a cave' - Vijaya Prabhakaran speech!

 

'குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான்' என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசியுள்ளார்.

 

விலைவாசி உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் பேசுகையில்,

 

இன்னைக்கு கேப்டன் (விஜயகாந்த்) நல்லா இருந்திருந்தால் இந்த கட்சியை ஒன்னும் செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். நாங்கள் எல்லாருமே அவரின் வளர்ப்புதான். அவர் இந்த மக்களுக்கு செஞ்சது ஆயிரம், லட்சம் இருக்கு. 40 வருஷம் இந்த மக்களுக்காக செய்திருக்கிறார். இன்னைக்கு அவர் உடல்நிலை சரியில்லாததால் ஓய்வு எடுக்கிறார். மீண்டும் நான் சொல்கிறேன் குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான். இன்று சேலத்திலிருந்து வரும் பொழுது கள்ளக்குறிச்சி தாண்டிதான் வந்தேன். ஸ்ரீமதி என்ற மாணவி இறந்த அந்த கல்லூரியை பார்த்துவிட்டு தான் வந்தேன். அது கொலையா தற்கொலையா என இன்னும் யாருமே சரியாக சொல்லவில்லை. புலன் விசாரணை படத்தில் டயலாக் ஒன்று இருக்கும். 'கொலையா தற்கொலையா' அதே போன்று தான் திரும்பவும் கேள்வியை வைக்கிறோம். என்னதான் கோர்ட் சொன்னாலும் ஸ்ரீமதியின் பெற்றோர்கள் எல்லா கட்சித் தலைவர்களையும் சந்தித்து அதற்குரிய நியாயத்தை கேட்கிறார்கள். திமுக அரசு ஆட்சியில் இருக்கிறது. அவங்க ஆட்சியில் இல்லாத பொழுது அனிதா என்ற ஒரு மாணவியின் மரணத்தை அரசியல் செய்தார்கள். ஆனால் ஸ்ரீமதி விஷயத்தில் ஏன் இவ்வளவு இன்வால்வ்மெண்ட் கொடுக்க மாட்டேங்கிறார்கள். நிச்சயம் திமுக அரசு ஸ்ரீமதி என்ற மாணவி எப்படி இறந்தார்கள் என்று கேள்வியை எழுப்பி பெற்றோர்களுக்கு சரியான பதிலை கொடுக்க வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.