Skip to main content

அதிமுக பிரமுகர் இல்ல விழா; கிராம மக்கள் கொண்டு வந்த திக்குமுக்காட வைக்கும் சீர்வரிசை

Published on 26/02/2023 | Edited on 26/02/2023

 

is a line of seers brought by the village itself; Brides and grooms

 

சிவகங்கை மாவட்டத்தில் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து 500 ஆடுகளுடன் சீர் செய்தது கவனத்தை ஈர்த்துள்ளது.

 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி எஸ்.புதூர் ஒன்றியத்தை சேர்ந்தவர் பொன்.மணிபாஸ்கர். மாவட்ட சேர்மனான இவர் அதிமுக சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளராக உள்ளார். இவரது மகள் ஹரிப்பிரியாவின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள ஓவியம் கார்டனில் நடந்தது.

 

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 1000க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பித்தளைப்பாத்திரங்கள், குத்துவிளக்குகள் மற்றும் ஏறத்தாழ 500 ஆடுகளுடன் ஊர்வலமாக சென்று மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அதனுடன் பலகாரங்கள், பூக்கள், பூஜைப் பொருட்கள், உடைகள் என 350க்கும் மேற்பட்ட தாம்பூலத் தட்டுகளுடன் கிராம மக்கள் திருமணத்திற்கு மணமக்களை வாழ்த்தியது கவனத்தை ஈர்த்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாடையில் காயம்…? 108 ஊழியரின் மர்ம மரணத்தால் உறவினர்கள் சாலை மறியல்...!!!

Published on 01/03/2020 | Edited on 01/03/2020

108 ஆம்புலன்சில் மருத்து உதவியாளராக பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவர் சனிக்கிழமையன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் ஊழியரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் தற்பொழுது சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.


 

INCIDENT IN SIVAKANGAI

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காவல்துறை துணைச்சரகத்திற்கு உட்பட்ட பெத்தாச்சிக் குடியிருப்பு பகுதியை சேர்ந்த குட்டியான் - பேச்சி தம்பதியின் மகளான கற்பகவல்லி கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக புதுவயல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்திருக்கின்றார். இந்நிலையில், சனிக்கிழமையன்று காலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட தங்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகின்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாக்கோட்டைப் போலீசார் கற்பகவல்லியின் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

INCIDENT IN SIVAKANGAI

 

ஞாயிற்றுக்கிழமையன்று பிரேதப்பரிசோதனை நடக்கவுள்ளது என அறிவிக்கப்பட்ட நிலையில், " கற்பகவல்லியின் தாடையில் காயம் உள்ளதால் இவரது மரணத்தில் சந்தேகப்படுகின்றோம்.. டிஎஸ்பி உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவக்குழு வந்த பிறகே பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும்." என காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரியிடம் கோரிக்கை வைத்த நிலையில், பிரேதப் பரிசோதனை துவங்கியதால் இறந்த கற்பகவல்லியின் உறவினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் காங்கிரஸ்காரர்கள் உள்ளிட்ட பலர் சாலை மறியலில் ஈடுப்பட்டு போராடி வருகின்றனர். சாலைமறியலில் ஈடுப்பட்ட நபர்களிடம் தற்பொழுது பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளது காரைக்குடி துணைச்சரக காவல்துறை. சாலையின் இருபுறமும் மறிக்கப்பட்டதால் வாகனங்கள் சாலையை கடக்க முடியாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 

Next Story

காரைக்குடி சிப்காட்டுக்கான அரசாணை ரத்து!

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

காரைக்குடியில் சிப்காட்டுக்கான அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சுமார் 1,253 ஏக்கர் பரப்பளவில் அமையவிருந்த சிப்காட் தொழிற்பேட்டைக்கான திட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

sivagangai karaikudi sipcot decision cancel in tn govt



காரைக்குடியில் கழனிவாசல் மற்றும் திருவேலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க இடம் தேர்வான நிலையில், கிராம மக்கள் நிலத்தை கையகப்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், சிப்காட் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட்டுள்ளது.