Skip to main content

72 ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்க்கையில் மின்வெளிச்சம்.... மகிழ்ச்சியில் மலைவாழ் மக்கள்!

Published on 27/05/2019 | Edited on 27/05/2019

நெல்லை மாவட்டத்தின் தென் மேற்குத் தொடர்ச்சி மலை பரந்து விரிந்து செல்கிற அம்பை பாபநாசம் பகுதி மலையில் வழி வழியாய் வாழ்ந்து வருகிற மலைவாழ் பழங்குடியினரின் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம்.

 



தேசம் விடுதலை பெற்ற பிறகும் முக்கால் நூற்றாண்டாக மண்ணெண்ணைச் சிமினியின் அரையிருட்டில் வசித்து வந்த அந்த 48 குடும்பங்களின் வீடுகளுக்கு மின்சாரம் நேற்று முன்தினம் எட்டிப்பார்த்துக் கொட்டிய வெளிச்சத்தால் ஆச்சர்யத்தில் உறைந்து போயிருக்கிறார்கள் அந்தக் காணிக் குடியிருப்பு வாசிகள். மலைமீது காரையாறு அகஸ்தியர் காணிக்குடியிருப்பு சின்னமயிலாறு, சேர்வலாறு போன்ற பகுதிகளில் கொடிய விலங்குகள் ராஜநாகங்கள் உறைகிற இடங்களில் பழங்குடியின மக்கள் தங்கள் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார்கள். இதில் சேர்வலாறு, காரையாறு, மற்றும் அகஸ்தியர் காணிகுடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு ஏற்கனவே மின்சார வசதிகள் உள்ளன.

 

  light after 72 years- People in happiness!



ஆனால் காரையாறு ஓரத்தில் சின்னமயிலாறு காணிகளின் குடியிருப்புகளான 48 வீடுகளுக்கு மட்டும் மின்சார வசதி தரப்படவில்லை. தேசம் சுதந்திரமடைந்து தற்போதைய வருடம் வரை, அதாவது 72 வருடங்களாக அந்த மலைப் பழங்குடியின மக்கள் கொடிய விலங்குகளுக்கு அஞ்சியவாறு அவைகளின் மத்தியில் குடும்ப உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் பொழுதை நகர்த்தி வந்துள்ளனர்.

 

 



தங்களின் உயிர் நெருக்கடி வாழ்வினைச் சுட்டிக் காட்டிய மின்சார வசதியைப் பெற அரசு மற்றும் மின்சாரத் துறைக்கு கோரிக்கைப் போர் அசராமல் நடத்தி வந்திருக்கின்றனர். அந்தப் பகுதிகளில், வனவிலங்குகள் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி என்று வனத்துறையினர் தடுத்தும் சிக்கல்களையும் தெரிவித்தனர். மத்திய சுற்றுச் சூழல் துறையும்  இதையே காரணம் காட்டி மின் இணைப்பை மறுத்தது.

 



ஆனால் கோரிக்கையில் தளர்ந்து விடாத காணியினமக்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் நல்ல காலம். இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு மின்சாரம் வழங்க ஒப்புதலானது, நெல்லை மாவட்ட கள இயக்குனர் மற்றும் தலைமை வனக் காவலர் கைரத் மோகன்தாஸ் துணை இயக்குனர் கொம்மு ஓம்கார் போன்றவர்களின் முயற்சியால் பழங்குடியின மக்களின் 48 வீடுகளுக்கும், வனத்துறையின் நிதி உதவியுடன் நேற்று முன்தினம் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதற்கென்று 100 கே.வி.ஏ. மின்மாற்றி மற்றும் 38 மின் கம்பங்கள் வசதிகளுடன் அந்த வீடுகளுக்குள் வெளிச்சம் பாய்ந்தது.

 


72 வருடங்களுக்குப் பின்பு தங்களது வாழ்க்கையில் எட்டிய வெளிச்சம் தங்கள் மக்களுக்கான விடியல் என்ற மலைப்பிலிருக்கின்றனர் மலைப் பழங்குடியினர். நிகழ்வுகளில் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் விஜயராஜ் வனச்சரகர் சரவணக் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அதிசயங்கள் நினைத்த நேரத்தில் நடந்து விடுவதில்லை. அரிதிலும் அரிதாகத்தான் நிகழும்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்காத சிறுத்தை! பிடிக்க முடியாமல் தடுமாறும் வனத்துறை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 forest department is struggling to catch the elusive leopard

கடந்த 2ஆம் தேதி மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளை வரவழைத்து, தனிக்குழு அமைத்து அந்தச் சிறுத்தையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதன்படி, சிறுத்தையின் காலடித்தடம் அது சிறுநீர் கழித்ததற்கான அடையாளம், அதன் கழிவு ஆகியவற்றை அடையாளம் கண்டு, சிறுத்தை மயிலாடுதுறை பகுதியில் நடமாடுவதை உறுதி செய்தனர். அதைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை செய்து வந்த நிலையில், நான்கு தினங்களுக்கு முன் அரியலூர் மாவட்டம் செந்துறை நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்தனர். இது குறித்து அரியலூர் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதி இளைஞர்களுடன் சிறுத்தையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர்.

 forest department is struggling to catch the elusive leopard

ஒரு லேத் பட்டறையில் பதுங்கி இருந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியதைப் பலரும் பார்த்தனர். இதையடுத்து சிறப்பு குழுவினர் பெரிய கூண்டை கொண்டு வந்து செந்துரை அருகே உள்ள ஓடை பகுதியில் கூண்டுக்குள் ஆட்டை அடைத்து வைத்தனர். ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு ஆட்டை உணவாக சாப்பிட்டு சிறுத்தை அந்த கூண்டை தேடி வரும் அப்போது அதில் மாட்டிக்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் சிறுத்தை அந்தக் கூண்டுக்குள் வந்து சிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து செந்துறையைச் சுற்றிலும் உள்ள முந்தரிக்காட்டு பகுதிகளுக்குள் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுத்தை அரியலூர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அல்லது அருகில் உள்ள கடலூர் மாவட்ட பகுதிகளுக்குள் சென்று இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். தற்போது நிலவரப்படி தினசரி ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை சிறுத்தை இரவு நேரங்களில் இடம்பெயர்ந்து சென்றுள்ளது.

 forest department is struggling to catch the elusive leopard

இதனடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைய ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் தங்களது கண்காணிப்பைத் தீவிர படுத்தியுள்ளனர். இதனைப்போன்று கடந்த 2013 ஆம் ஆண்டு பெரம்பலூர் நகரை ஒட்டி உள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பெரம்பலூர் அருகில் உள்ள துறைமங்கலம், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தையைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அப்பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுக்குள் ஆட்டை விட்டு காட்டுப்பகுதியில் வைத்தனர். அப்போது அந்தச் சிறுத்தை ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு அதை கடித்து தின்பதற்காக கூண்டுக்குள் சென்று சிக்கியது. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்தச் சிறுத்தையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இவ்வாறு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரம்பலூர் ,அரியலூர்,மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.