Skip to main content

உயிரை பறித்த கருக்கலைப்பு ஊசி... ஆயுர்வேத மருத்துவரை தேடும் போலீசார்

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

பொள்ளாச்சி அருகே கருக்கலைப்புகாக போடப்பட்ட ஊசியால் ஐந்து மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலி ஆயுர்வேத மருத்துவர் மீதும் அவரது மகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் தேடி வருகின்றனர்.

 

நெகமம் மேட்டுவாவி அரிஜன காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான செல்வராஜ் என்பவரின் மனைவி வனிதாமணி, 5 மாத கர்ப்பிணி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் இருக்கின்ற நிலையில் இனி குழந்தை வேண்டாம் என கருதி கருக்கலைப்பு செய்ய முடிவு செய்தனர்.

 

A life-threatening abortion needle ... police looking for Ayurveda doctor

 

இதற்காக ஊட்டச்சத்து மாத்திரைகள் கொடுத்து மருத்துவ ஆலோசனைகள் பெறும் ஆரம்ப சுகாதார நிலையதிற்கு சென்றபோது கருக்கலைப்பு செய்யமுடியாது என செவிலியர்கள் இவரை இரு முறை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து 5 மாதம் வளர்ந்துவிட்ட கருவை அரசு மருத்துவமனைக்கு சென்றால் கலைக்க முடியாது என்று எண்ணிய வனிதாமணி தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ய நினைத்து வடசித்தூர் சிஎம் நகரில் உள்ள ஒரு தனியார் ஆயுர்வேதிக் சென்டருக்கு சென்றுள்ளார்.

 

A life-threatening abortion needle ... police looking for Ayurveda doctor

 

இதன்தொடர்ச்சியாக ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சுமியும், அவரது மகன் கார்த்திக்கும் வனிதாமணியின் வீட்டிற்கே சென்று கருக்கலைப்புக்கு ஊசி செலுத்தி உள்ளனர். ஊசி செலுத்திய அடுத்த சில நிமிடங்களில் வனிதாமணி உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. அதனை அடுத்து உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லப்பட்ட அவர் வழியிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து கார்த்திக்கும் ஆயுர்வேத மருத்துவர் எனக் கூறப்படும் முத்துலட்சுமியும் தலைமறைவாகினர். 

 

A life-threatening abortion needle ... police looking for Ayurveda doctor

 

இது தொடர்பாக வானிதமணியின் மகன் மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 314 படி வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சுமியையும், கார்த்திக்கையும் தேடி வருகின்றனர். 

 

A life-threatening abortion needle ... police looking for Ayurveda doctor

 

அதேபோல் மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனரிடமிருந்தும் முத்துலட்சுமி கார்த்திக் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில் முத்துலட்சுமி போலி மருத்துவர் என்பதும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.