Skip to main content

திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறு; திருமணமாகி 3 மாதத்தில் கணவனைக் கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

Published on 26/10/2022 | Edited on 26/10/2022

 

hkj

 

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் ஊராட்சி போரம் கிராமத்தில் திருமணமாகி 3 மாதங்களில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த தன் கணவரை தலையில் அடித்துக் கொன்று கிணற்றில் வீசிவிட்டு கணவரை காணவில்லை என்று நாடகமாடிய மனைவிக்கு ஆயுள் மற்றும் 7 ஆண்டுகள் சிறை. 

 

புதுக்கோட்டை மாவட்டம் போரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (30) இவருக்கும் கறம்பக்குடி வட்டம் மாங்கான் கொல்லப்பட்டி கணேசன் மகள் நந்தினி என்ற பெண்ணுக்கும் திருமணமானது. நந்தினி திருமணத்திற்கு முன்பு திருப்பூரில் வேலை செய்த இடத்தில் பழக்கமான ஒரு இளைஞருடனான நட்பு தொடர்ந்துள்ளதால் பாண்டித்துரைக்கும் நந்தினிக்கும் இடையே தினசரி சண்டை நடந்துள்ளது. 

 

இந்த நிலையில் கடந்த 2021 செப்டம்பர் 20 ந் தேதி வீட்டிலிருந்து சென்ற தன் மகனைக் காணவில்லை என்று பாண்டித்துரையின் தாயார் மீனாட்சி ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அன்றே விசாரணையை தொடங்கிய போலீசாரால் பாண்டித்துரையை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தான் 12  நாட்களுக்குப் பிறகு பாண்டித்துரையின் வீட்டின் அருகே உள்ள கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதால் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் மீட்டு பார்த்தபோது, சடலமாக மிதந்தது 12 நாட்களுக்கு முன்பு காணாமல் போன பாண்டித்துரையின் உடல் என்பது தெரிய வந்தது.

 

இதுதொடர்பாக அவரின் மனைவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தன் கணவரை தலையில் தாக்கி கை, கால்களை கட்டி கிணற்றில் தூக்கி வீசினேன் என்று நந்தினி கூறியுள்ளார். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் மாவட்ட அரசு வழக்கறிஞர் சு.வெங்கடேசன் வழக்கில் ஆஜரானார். போலீசார் வழக்கு சம்மந்தமான ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தனர். 

 

இந்த நிலையில் புதன் கிழமை இந்த வழக்கில்  நீதிபதி அப்துல் காதர் வழங்கிய தீர்ப்பில், 302 ஐபிசி-யின் படி ஆயுள் தண்டனையும் ரூ.500 அபராதமும், ஐபிசி 201 ன் படி 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். திருமணத்தை மீறிய உறவுக்குத் தடையாக இருந்த கணவரை திருமணமான 3 மாதத்திலேயே கொலை செய்த மனைவிக்கு ஆயுள் மற்றும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.