Skip to main content

 “ஏய்... யார் மேல கைவைக்கிற...” - உதவி ஆணையரை மிரட்டிய குற்றவாளி

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Life sentence for threatening Assistant Commissioner

 

“ஏய்... யார் மேல கை வைக்கிற, உன்ன மாதிரி எத்தனை ஆஃபிசர பாத்துருக்கேன்” என்று காவல் உதவி ஆணையரை மிரட்டிய ஆயுள் கைதியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மாநகராட்சி துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இவரது மகன் சூர்யாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த குட்டியப்பன் என்பவருக்கு இடையே தகராறு ஏற்பட, ஒரு கட்டத்தில் சூர்யா குட்டியப்பனைக் கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த குட்டியப்பனை மீட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து குட்டியப்பனின் சகோதரர்கள் டெனிபா, சிலம்பரசன்,  திருநாவுக்கரசு, மற்றும் அவரது நண்பர்கள் உட்பட மொத்தம் 8 பேர் சேர்ந்து சூர்யாவின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். ஆனால் சூர்யா அப்போது வீட்டில் இல்லாததால் அவரது தந்தை  விஜயகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈட்டுப்பட்டுள்ளனர். 

 

ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் பெரும் தகராறாக மாறிய நிலையில், குட்டியப்பனின் சகோதரர்கள் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 8 பேரும் சேர்ந்து விஜயகுமாரை வெட்டி படுகொலை செய்துள்ளனர். இது குறித்த வழக்கு சேலம் மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட டெனிபா(35), சிலம்பரசன்(31), திருநாவுக்கரசு(30), மார்ட்டின்(35), ஜீசஸ் (27), ஜெயக்குமார்(25), விக்னேஷ்(24), சிவா (24) உள்ளிட்ட 8 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். 

 

இதையடுத்து குற்றவாளிகளை நீதிமன்றத்திலிருந்து சேலம் மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டு செல்ல ஒவ்வொருவராக வேனில் போலீசார் ஏற்றினர். அப்போது  ஒரு  குற்றவாளி கையை பிடித்துக் காவல் உதவி ஆணையர் ராமமூர்த்தி வேனில் ஏறுமாறு கூறியுள்ளார். இதனால் கோவமடைந்த அந்த குற்றவாளி “ஏய்... யார் மேல கை வைக்கிற, உன்ன மாதிரி எத்தன அதிகாரியை நா பார்த்து இருப்பேன்...உன்னால என்ன பண்ண முடியும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன் பிறகு அங்கிருந்த மற்றொரு குற்றவாளி அவரை சமாதானப்படுத்தி வேனில் ஏற வைத்து மத்தியச் சிறைக்கு அழைத்துச் சென்றார். போலீசார்  முன்னிலையில் காவல் உதவி ஆணையரைக் குற்றவாளி ஒருவர் எச்சரித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.