/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1126.jpg)
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சிறுவம்பார் கிராமத்தில் கடந்த 25-12-2018 அன்று அக்கிராமத்தின் சுடுகாட்டு பகுதியில் சைக்கிளில் வந்த மஞ்சமுத்து என்பவரை சொத்து பிரச்சனை காரணமாக வழிமறித்து, அக்கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கருவக்கட்டையால், கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் மஞ்சமுத்து சிகிச்சை பலனின்றி கடந்த 29.12.2018 அன்று உயிரிழந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3470.jpg)
இதுகுறித்து அவரது மனைவி மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கானது, விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ராமலிங்கத்தின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரபா சந்திரன் தீர்ப்பளித்தார். அதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இராமலிங்கம் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
Follow Us