Skip to main content

ஒரே ஆண்டில் 24 ஆயிரம் பேரின் லைசென்ஸ் ரத்து...- ஈரோடு போலீஸ் சாதனை

Published on 01/01/2020 | Edited on 01/01/2020

ஈரோடு மாவட்ட காவல்துறை வாகன விதிமீறல் வழக்குகளில் அதிக வழக்குகள் பதிவு செய்து மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. இதுபற்றி மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசன் கூறியதாவது,

ஈரோடு மாவட்டத்தில் சென்றாண்டு நடந்த 180 சாலை விபத்துகளில் 203 பேர் இறந்துள்ளனர். இது 2018 ஆண்டை விட 44 சதவிகிதம் குறைவு. சாலை விதிமுறை மீறல் தொடர்பாக மூன்று லட்சத்து 86 ஆயிரத்து 699 வழக்குகள் பதிவு செய்துள்ளோம்.

 

License revocation of 24 thousand people in one year ... - Erode police record

 

ரூபாய் இரண்டு கோடியே 44 லட்சத்து எட்டாயிரத்து 463 ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளோம்.. குடிபோதையில் வாகன ஓட்டியதில்  இரண்டாயிரத்து 420, மற்றும் அதிவேக வாகன இயக்கம் நான்காயிரத்து 112 அதே போல் அதிக பாரம் ஏற்றியது 263, அதிக எண்ணிக்கையில் பயணிகளை  ஏற்றியது ஐந்தாயிரத்து 379, மொபைல் போன் பேசியவாறு வாகன இயக்கம் 17 ஆயிரத்து 650, ஹெல்மெட் அணியாமல் சென்றது இரண்டு லட்சத்து 49 ஆயிரத்து 817, சீல் பெல்ட் அணியாமல் சென்றது 34 ஆயிரத்து 953 என்பதோடு இதர வழக்குகள் 72 ஆயிரத்து 105 பதிவு செய்யப்பட்டன.

கடந்தாண்டு சாலை விதிகளை மீறி விபத்துகளை ஏற்படுத்தியதாக 23 ஆயிரத்து 438 ஏறக்குறைய 24 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் லேடீஸ் பர்ஸ்ட் என்ற திட்டம் 2019 மே 11ல் துவங்கியது. இதில் ஆயிரத்து 396 அழைப்புகள் வந்துள்ளன. அதேபோல் ஹலோ சீனியர்ஸ் திட்டம் கடந்தாண்டு ஜனவரி 15 ல் துவங்கியது. அதில் ஆயிரத்து 138 மனுக்கள் வந்தன. 

இதில் மொத்தமாக ஆயிரத்து 102 புகார் மனு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இரண்டு ஆதாய கொலை, ஒரு கூட்டு கொள்ளை, 12 கொள்ளை, 26வழிப்பறி, 263 திருட்டு வழக்கு என மொத்தம் 412 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குற்ற செயல்களால் ரூபாய் ஐந்து கோடியே 80 லட்சம் அளவுக்கு சொத்து கொள்ளை போனது. இதில் நான்கு கோடியே 79 லட்சம் சொத்துகளை நாங்கள் மீட்டுள்ளோம்.

குற்ற சம்பவங்களை தடுக்க ஒவ்வொரு சப்–டிவிசன் வாரியாக ஈரோட்டில் 169, பெருந்துறையில் 76, பவானிக்கு 47,கோபியில் 71, சத்தியமங்கலத்திற்கு 46 என மொத்தம் 409 இடங்களில் கேமராக்களை பொருத்தியுள்ளோம்.

தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நகை கடைகள், பெட்ரோல் பங்க்களில் சப்–டிவிசன் வாரியாக சி.சி.டி.வி கேமராக்கள் ஈரோட்டில் மூவாயிரத்து 970, பெருந்துறையில் ஆயிரத்து 639, பவானியில் ஆயிரத்து 380, கோபிசெட்டிபாளையத்தில் மூவாயிரத்து 740, சத்தியமங்கலத்தில்  803 என மொத்தம் 11 532 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகரில் குற்றசம்பவங்களை தடுக்க, கண்காணிக்க ஐந்து இடங்களில் நவீன முறையில் ஸ்பீடு டூம் கேமரா பொருத்தப்பட்டுள்ளது" என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.