Skip to main content

ஓரினக் காதல்; 3 குழந்தைகளின் தாயுடன் வெளியேறிய இளம்பெண் 

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

lgbt issue in salem

 

சேலம் அருகே, தன்பாலின ஈர்ப்பால் 3 குழந்தைகளின் தாயும் இளம்பெண்ணும் இரண்டாவது முறையாக வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இரு பெண்களின் கணவர்களும் காவல்நிலையத்திற்கு நடையாக நடக்கின்றனர்.    

 

சேலம் கொண்டலாம்பட்டி அரசமரத்துக்காட்டூரைச் சேர்ந்தவர் ஷீலா(25). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளிபட்டறை  தொழிலாளியுடன் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. இவர்களுடைய பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் மாலா(39). திருமணம் ஆன இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஷீலாவும், மாலாவும்  அருகருகே வசித்து வந்ததால் அவர்கள் நெருங்கிப் பழகி வந்தனர். இதுவே அவர்களுக்குள் ஒரு கட்டத்தில் ஓரினச் சேர்க்கை உறவாக மாறியது. மாலா தன்னுடன் நெருங்கி வராமல் தவிர்த்து வருவதை உணர்ந்த அவருடைய கணவர், மனைவியின் நடத்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கண்டுபிடித்தார். ஒரு கட்டத்தில் மாலாவும், ஷீலாவும் ஓரினச் சேர்க்கை உறவாளர்களாக மாறிப்போனதை அறிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாலாவின் கணவர், உடனடியாக அங்கிருந்து வீட்டை காலி செய்துவிட்டு தம்மநாயக்கன்பட்டி பகுதிக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.

 

கடந்த ஓராண்டாக அவர்கள் அங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஜூன் 3 ஆம் தேதி, ஷீலா திடீரென்று மாயமானார். அவருடைய கணவர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. அவருடைய அலைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. பல இடங்களில் தேடி அலைந்த பிறகு வீடு திரும்பினார். வீட்டு படுக்கை அறையில் ஷீலா தனது தாலியைக் கழற்றி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டது தெரிய வந்தது. படுக்கை மீது ஒரு கடிதமும் வைத்துவிட்டுச் சென்றிருந்தார். அந்தக் கடிதத்தில், ''எனக்கு கணவருடன் வாழப் பிடிக்கவில்லை. அதனால்தான் அவர் கட்டிய தாலியை கழற்றி வைத்துவிட்டேன். எனக்கு  பிடித்த மாலாவுடன் சேர்ந்து வாழச் செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்,'' என்று குறிப்பிட்டு இருந்தார்.  

 

இதைப் பார்த்து அதிர்ந்து போன கணவன், இதுகுறித்து கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர், ஷீலா மாயமானதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த புகார் பதிவு செய்த சில மணி நேரத்தில் மாலாவின் கணவரும், தன் மனைவியைக் காணவில்லை என கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையில் ஷீலாவும், மாலாவும் ஓரினச் சேர்க்கை உறவு காரணமாக ஏற்கனவே ஒருமுறை வீட்டை விட்டுச் சென்றதும், இப்போது இரண்டாவது முறையாக அவர்கள் வீட்டை விட்டுச் சென்றிருப்பதும் தெரிய வந்தது. அப்போது உறவினர்கள் அவர்களை தேடிக் கண்டுபிடித்து அறிவுரை வழங்கியுள்ளனர்.

 

3 குழந்தைகளின் எதிர்காலம் கருதியாவது இந்த உறவை கைவிடுமாறு கூறியுள்ளனர். அதன்பிறகுதான் மாலாவின் குடும்பம் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளது. இந்த நிலையில்தான் மீண்டும் வீட்டை விட்டுச் சென்ற மாலாவையும் ஷீலாவையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

(இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்கள் பெயர்கள் கற்பனையானவை). 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; போலீசார் தீவிர விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
woman lost their life in trichy

திருச்சி கீழ தேவதானம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் கர்ணன் (வயது 46. ). இவரது மனைவி நித்யா (வயது 34). இவர் கடந்த ஆறு வருடங்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இவருக்கு கடந்த 3 வருடங்களாக தோல்நோய் தொடர்பான பிரச்சனையும் இருந்து வந்துள்ளது. இதற்காக நித்யா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் வாழ்க்கையில் விரக்திடைந்த நித்யா சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.