வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரத்தின் அதிமுக செயலாளராக இருப்பவர் மதியழகன். இவரது அலுவலகம் கஸ்பா பகுதியில் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு ஏப்ரல் 23ந் தேதி வந்த ஒரு மொட்டை கடிதத்தில், உன்னை கொலை செய்யாமல் விடமாட்டோம் என வந்ததாக கூறப்படுகிறது. அந்த கடிதத்துடன் ஆம்பூர் நகர காவல்நிலையம் சென்ற அதிமுக நகரகர செயலாளர் மதியழகன், தனக்கு வந்துள்ள மொட்டை கடிதம் குறித்து புகார் தந்துள்ளாக கூறப்படுகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
கடந்த ஏப்ரல் 18ந் தேதி, ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் தீவிரமாக வாக்கு சேகரித்தார். இதனை பொருத்துக்கொள்ள முடியாத அமமுகவை சேர்ந்தவர்தான் இந்த கடிதத்தை அனுப்பியிருக்க வேண்டும் என மதியழகன் சந்தேகப்படுகிறார் என்கிறார்கள் அதிமுக தரப்பில். காவல்துறை இந்த கடிதம் எங்கு இருந்து வந்தது என விசாரணை நடத்திவருகின்றனர்.