Skip to main content

ஆழ்குழாய் கிணறுகளில் சேகரிக்கப்படும் மணல், ஜல்லியை அரசுக்கு வழங்கிட கோரி ஆட்சியரிடம் கடிதம்!

Published on 06/11/2021 | Edited on 06/11/2021

 

Letter to the Collector requesting to provide sand and gravel collected from bore wells to the government

 

தமிழகத்தில் மீத்தேன் எடுக்க அனுமதிக்க கூடாது என்று டெல்டா மாவட்டங்களில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தொடர் போராட்டத்திற்கு பிறகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதி இல்லை என்று அறிவித்தார். அதன் பிறகு கடந்த 2017 பிப்ரவரியில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு அறிவித்த நிலையில் அங்கு வெடித்த போராட்டம் தமிழகம் கடந்தும் பரவியது. 197 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு திட்டம் கைவிடப்படுவதாக கூறினார்கள்.

 

அதே நேரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார்கொல்லை, வடகாடு, வானக்கன்காடு,  கரு வடதெரு, கீழத்தெரு, கோட்டைக்காடு முள்ளங்குறிச்சி, புதுப்பட்டி உள்பட 8 இடங்களில் ஒஎன்ஜிசி நிறுவனத்தால் அமைக்கப்பட்டு எண்ணெய் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பிறகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் எண்ணெய் கிணறுகளை பாதுகாப்பாக மூடி விவசாயிகளிடம் நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

 

அப்போதைய மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆழ்குழாய் கிணறுகளை மூடுவதாக கூறியதுடன் எழுதிக் கொடுத்தார். ஆனால் 4 வருடங்கள் முடிந்தும் இன்னும் மூடப்படவில்லை என்ற ஆதங்கம் விவசாயிகளிடம் இருந்த நிலையில் கடந்த மாதம் ஒஎன்ஜிசி அதிகாரிகள் ஒவ்வொரு ஆழ்குழாய் கிணறுகளையும் ஆய்வு செய்தனர். ஆய்வு அறிக்கை ஒஎன்ஜிசி தலைமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் முதல்கட்டமாக புதுப்பட்டி மற்றும் கோட்டைக்காடு முள்ளங்குறிச்சியில் உள்ள 2 எண்ணெய் ஆழ்குழாய் கிணறுகளை மூட முன்வந்துள்ளனர்.

 

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை சந்தித்த ஒஎன்ஜிசி அதிகாரிகள் பொதுமேலாளர் சாய்பிரசாத், சிவில் பொதுமேலாளர் ரவி, துணைப்பொது மேலாளர் (மனிதவளம்) ஜோசப்ராஜ், வட்டாட்சியர் (அயற்பணி) தமீமுன் அன்சாரி ஆகியோர் கடிதம் கொடுத்துள்ளனர். அதில் ஒஎன்ஜிசி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் ஆழ்குழாய் கிணறுகள் மூடப்பட உள்ளதால் அதிலிருந்து உடைத்து சேகரிக்கப்படும் ரூ.85 லட்சம் மதிப்புள்ள 11 ஆயிரம் கன மீட்டர் அளவுள்ள மண் மற்றும் ஜல்லி கற்களை மாவட்ட வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்ள கேட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் புதுப்பட்டி, கோட்டைக்காடு முள்ளங்குறிச்சி எண்ணெய் ஆழ்குழாய் கிணறுகள் மூடப்படும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.