Skip to main content

காவல்துறை அதிகாரி பெயரில் வங்கிக்கு வந்த கடிதம்... பாதிக்கப்பட்ட சாதாரண மனிதன்!!

Published on 03/06/2021 | Edited on 03/06/2021
The letter that came to the bank in the name of the police officer ... the victim is an ordinary man

 

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன். இவர் அதே ஊரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் வரவு செலவு கணக்கு வைத்து பயன்படுத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவரின் வங்கி கணக்கை அந்த வங்கி மேலாளர் திடீர் என்று முடக்கம் செய்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குப்பன் இதுகுறித்து வங்கி மேலாளரை அணுகி விவரம் கேட்டுள்ளார். அப்போது வங்கி மேலாளர் மோசடி குற்றச்சாட்டு காரணமாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு பரிந்துரை கடிதத்தை அனுப்பினார். அதன் அடிப்படையில் உங்கள் வங்கிக் கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளார். 

 

இதைக் கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த குப்பன், அதைத் தொடர்ந்து  தனது வங்கி கணக்கை முடக்கி வைக்குமாறு எந்த அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடிதம் அனுப்பினார்? அதற்கான காரணத்தை தெரிவிக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விளக்கம் கேட்டு தனது வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். குப்பனின் கடிதத்தின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் உரிய விசாரணை செய்துள்ளார். அப்போதுதான் அதன்படி குப்பன் வங்கி கணக்கை முடக்கி வைக்குமாறு தங்கள் அலுவலகத்தில் இருந்து எந்த கடிதமும் வங்கிக்கு அனுப்பவில்லை என்றும் மாவட்ட போலீஸ் அதிகாரி பெயரில் யாரோ அப்படி ஒரு கடிதம் தயாரித்து வங்கிக்கு அனுப்பி வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து குப்பனின் வங்கி கணக்கு முடக்கத்தை நீக்கி வரவு செலவு செயல்பாட்டிற்கு கொண்டுவருமாறு முறையான கடிதம் ஒன்றை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வளவனூர் வங்கிக்கு அனுப்பி உள்ளனர். மேலும் இது தொடர்பாக வங்கிக் கிளை மேலாளர் அபிஷேக் குமார் போலீசில் புகார் அளித்ததன் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெயரின் வங்கிக்கு கணக்கு மூலம் கடிதம் அனுப்பியது யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அவர்கள் விசாரணையில் வங்கியில் எளிய முறையில் கடன் பெறும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை கூறுவதாக பல்வேறு நபர்களின் செல்போன் எண்ணை வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர். அதோடு குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்டால் வழிமுறைகள் குறித்து ஆலோசனை கூறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

The letter that came to the bank in the name of the police officer ... the victim is an ordinary man

 

அப்படி ஆலோசனை பெறுபவர்கள் பலர் முன்கூட்டியே வாட்ஸப்பில் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு குறிப்பிட்ட தொகை பணம் செலுத்து வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பலர் வாட்ஸ்அப்பில் அறிவிக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தி உள்ளனர். ஆனால் அவர்கள் கடன் பெறுவதற்கான வழிமுறை ஆலோசனைகளை முழுமையாக சொல்லாமல் மோசடி செய்துள்ளதாகவும் இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பது காலதாமதம் ஏற்பட்டதால் இதைத் தொடர்ந்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் சிலரான ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் பாலிசி ஏஜென்ட் ராஜசேகர், கமுதக்குடி முன்னாள் ராணுவ வீரர் முருகன், தீயணைப்பு நிலைய உதவியாளர் சாந்தாராம் ஆகிய மூவரும் தங்கள் ஆலோசனைக்கு பணம் செலுத்திய அந்த வங்கிக் கணக்கை முடக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். 

 

இதற்காக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பெயரில் போலியாக ஒரு கடிதம் தயாரித்து அதனை வளவனூரில் உள்ள அந்த வங்கிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாவட்ட கண்காணிப்பாளர் எழுதிய கடிதம் என்பதால் வங்கி மேலாளர் காவல்துறை அதிகாரி குறிப்பிட்ட அந்த வங்கிக் கணக்கை முடக்கி வைத்துள்ளார். ஆனால் அது குப்பன் கணக்கு என்பது பிறகு தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த மோசடியில் ஈடுபட்டது யார்? குப்பனின் வங்கி கணக்கில் எவ்வளவு பேர் ஆலோசனைக் கட்டணம் செலுத்தி உள்ளனர்? விசாரணையும் நடந்து வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெயரில் போலி கடிதம் அனுப்பிய மேற்படி மூவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடியில் ஈடுபட்டது யார் என்பது குறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே கட்சி நிர்வாகி வீட்டின் கழிவறையில் ரூ.1லட்சம் பறிமுதல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
IJK party executive house toilet Rs 1 lakh seized

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் துண்டறிக்கைகளை  தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (17.4.2024) இரவு பறிமுதல் செய்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சூசையப்பர் மகன் வினோத் சந்திரன்  ஐஜேகே கட்சியின் கிளைச் செயலாளராக உள்ளார். இவர் அந்தப் பகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து லால்குடி வட்டாட்சியர் உத்தரவின் பெயரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செழியன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில், வினோத் சந்திரன் வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், பணம் விநியோகிக்கக்கூடிய பெயர் பட்டியல் மற்றும் டாக்டர் பாரிவேந்தரின் பாராளுமன்றத் தொகுதி பணிகள் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட 500 புத்தகங்கள் 100 துண்டு பிரசுரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்தும் வினோத் சந்திரனிடம் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தன்னுடையது இல்லை என கூறியதை அடுத்து பறிமுதல் செய்த பணத்தினை பறக்கும் படை அலுவலர் செழியன் லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனிடம் ஒப்படைத்தார். அவர் பணத்தை லால்குடி கருவூலத்தில் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தார்.

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.