தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணல் அம்பேத்கரின் 66 ஆவது பிறந்த தினம் நாளை (14.04.2024) கொண்டாடப்படுகிறது. இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவிக்கையில், “அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14இல் தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம். அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அண்ணல் அம்பேத்கர் வழியில் சமத்துவ சமுதாயம் உருவாக்கிட அனைவரும் பாடுபடுவோம். சாதி, சமய வேறுபாடுகளை ஒழிப்பதில் அடையாளச் சின்னமாக விளங்கியவர் அம்பேத்கர்” எனத் தெரிவித்துள்ளார்.