Skip to main content

''ஒரு வார காலமாக ஏன் ரொம்ப பதறுகிறார்கள் சில பேர் '' - டி.டி.வி.தினகரன்! 

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

 '' Let the speakers speak ... I do not know when it will happen '' - TTV Dinakaran!

 

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகி தமிழகம் திரும்பியுள்ள சசிகலாவின் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும் என வியூகங்கள் வெளியாகி வரும் நிலையில், சென்னை தி.நகரில் தங்கியுள்ள சசிகலாவை இன்று (12.02.2021) சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், ''அதிமுகவை மீட்டெடுப்பது என்றைக்கு நடக்கும் என தெரியாது. அதிமுகவை மீட்டெடுக்கத்தான் அமுமுகவை ஆரம்பித்தோம். பேசுபவர்கள் பேசட்டும் காலம் அவர்களுக்குப் பதில் சொல்லும்.

 

ஒரு அமைச்சர் பதவியில் இருப்பவர்கள், ஒரு முதலமைச்சராக இருப்பவர்கள் எப்படிப் பேச வேண்டும் என்கின்ற ஒரு முறை கூட இல்லாமல், சாலையில் நின்று எப்படி எல்லாம் காட்டுமிராண்டித்தனமாக பேசுகிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவார காலமாக ஏன் ரொம்ப பதறுகிறார்கள் சில பேர். என்ன காரணம். நாங்களாக வந்தோம், நாங்களாக இருக்கிறோம். நான் ஏதாவது ஒரு வார்த்தை கண்ணியக் குறைவாக பேசி இருக்கேனா. கட்சி ஆரம்பித்தது அதிமுகவை மீட்டெடுக்க என்று சொன்னது தப்பா" என்றார்.

 

சார்ந்த செய்திகள்