
தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 990 ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கை 1,039 ஆக பதிவான நிலையில் இன்றைய ஒருநாள் பாதிப்பு சற்று குறைவாகும். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,20,153 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 111 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 114 என்று இருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,136 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 17 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 11,685 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,172 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 26,53,832 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். கோவையில்-117, ஈரோடு-73, செங்கல்பட்டு-85, தஞ்சை-42, திருவள்ளூர்-30, சேலம்-57, திருப்பூர்-66, திருச்சி-35, நாமக்கல்-42 பேருக்கு கரோனா இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பண்டிகை நேரம் என்பதால் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் நெறிப்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநில அரசுகளுக்கும் அவ்வப்போது அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுவந்த நிலையில், தீபாவளியை ஒட்டி பொருட்கள் வாங்க மக்கள் பொது இடங்களில் கூடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)