Skip to main content

சிறுத்தையின் அகோரத் தாண்டவம்... அச்சத்தில் வனகிராம மக்கள்!

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

 Leopard's aggression .... Forest people in fear!

 

தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ளது கடையம். அங்குள்ள மலை வனப்பகுதியில் புலி, சிறுத்தை செந்நாய், மரநாய், காட்டெருமை யானை போன்றவைகள் வசித்து வந்தாலும், அவ்வப்போது தண்ணீருக்காக தரையிறங்கும் வனவிலங்குகள் கிராமத்திற்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தியும், இரைக்காக கால்நடைகளை வேட்டையாடி வருவதும் உண்டு. அவைகளைப் பொறி வைத்துப் பிடிக்கிற வனத்துறையினர் அவ்வப்போது விலங்குகளை வனப்பகுதியில் விட்டலும், அவைகள் மீண்டும் மீண்டும் கிராமப் பயிர்களையும் கால்நடைகளையும் ஒரு வழி பண்ணுவது வாடிக்கையாகிவிட்டது.

 

இந்நிலையில் கடையம் பக்கம் இருக்கும் கடனாநதி அணை அருகே உள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பு கிராமத்தின் முருகன் என்பவர் தனது வெள்ளாடுகளை அருகிலுள்ள மலைக்காடுகளின் பக்கம் மேய்ச்சலுக்காக ஓட்டிச் செல்பவர். வீடு திரும்பும் போது ஆடுகளை கணக்கெடுத்து அடைப்பார் நேற்று முன் தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுத் திரும்பும் போது கணக்கெடுத்ததில் ஒரு ஆடு காணாமல் போனது தெரிய வந்தது.

 

தோராயமாக பார்த்தாலும் ஒரு ஆட்டின் விலை 20 ஆயிரத்திற்கும் மேல் என்கிறார்கள். நேற்று காலையில் அவர் ஆட்டைத் தேடி வனப்பகுதிக்கும், ஊருக்கும் எல்லையிலுள்ள சோலார் மின்வேலி அருகே வரும்போது அங்குள்ள மரத்தில் வயிறு கிழிக்கப்பட்டு சதைகள் குதறிய நிலையில் ஆடு தொங்கிக் கொண்டிருந்தது கண்டு அலறியிருக்கிறார். வயிறு பெருத்து நிலையில் மரத்தின் கிளையில் தொங்க விடப்பட்ட அந்த ஆடு தூக்கிலிடப்பட்ட நிலையிலிருந்தது கண்டு பதறிய முருகன், உடனடியாக கடையம் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். கடையம் வனச்சரக பயிற்சி வனபாதுகாவலர் ராதையின் உத்தரவுபடி, வனவர் முருகசாமி, வனக்காப்பாளர் மணி, வனக்காவலர் முருகேஸ்வரி மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

 

 Leopard's aggression .... Forest people in fear!

 

கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை ஆட்டை அடித்துக் குதறிக் கிழித்து நெஞ்சுப்பகுதியை மட்டும் தின்று விட்டு மீத உடலை மரத்திற்கு கொண்டு சென்று அதில் தொங்கவிட்டுப் பின் வனப் பகுதிக்குள் சென்றது தெரிய வந்திருக்கிறது. இந்த ஆட்டை தின்பதற்காக சிறுத்தை திரும்பவும் வரும் என்று எதிர்பார்த்து மூன்று வழியோரங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணித்து வருகின்றனர் வனத்துறையினர். சிறுத்தை கொன்று மரத்தில் தொங்க விட்ட ஆடு, ஆறு மாத நிறை சினையாகவுள்ளதாம். ஒரிரு நாட்களில் குட்டிகள் போடும் சூழலில் சிறுத்தை தன் அட்டகாசத்தை நடத்தியிருக்கிறது. ஆட்டை அடித்து தூக்கிச் சென்ற சிறுத்தை மரத்தில் ஏறும் போது அதன் காலின் நகங்கள் பட்ட மரத்தின் பகுதி அரிவாளால் பட்டையை உரித்தது போன்ற தடமிருந்தது. அதன் மூலம் அந்தச் சிறுத்தையின் பலமும் அதன் வளர்ச்சியும் தெரிய வருகிறது. என்கின்றனர் கிராம மக்கள்.

 

ஆட்டுக்கே இந்த கதி என்றால் தனி மனிதன் சிக்கினால் என்னவாகும் என்ற நடுக்கத்திலிருக்கிறது வனப் பகுதி கிராமங்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊருக்குள் நுழைந்த காட்டு யானை; அச்சத்தில் கிராம மக்கள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
A wild elephant entered the town; Villagers in fear

கோவையில் வேடப்பட்டியில் திடீரென காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பேரூர் அடுத்துள்ள வேடப்பட்டி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றை காட்டு யானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் முகாமிட்டு பெரும் அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கரடிமடை பகுதிக்கு வந்த காட்டு யானை தாக்கியதில் நான்கு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பேரூர் வேடப்பட்டி சாலை வழியாக ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. சுமார் 20 கிலோமீட்டர் வனப்பகுதியில் இருந்து கடந்து வந்துள்ள காட்டு யானை தனியார் கல்லூரியின் பின்புறத்தில் முகாமிட்டுள்ளது.

காட்டு யானையை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த கோவை வனச்சரக வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானை சுற்றி வருவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒற்றைக் காட்டுயானை ஊருக்குள் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

காட்டுத்தீ பரவல்; திணறும் வனத்துறை

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
spread of wildfires; A forest department that is stifling

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருவது வனத்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் சவாலாகி வருகிறது. குன்னூரில் பாரஸ்ட் ஸ்டேல் பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பற்றிய காட்டுத்தீயானது நாளுக்கு நாள் வேக வேகமாக பரவி வருவது அந்த பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்துள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த முடியாததால் குன்னூரில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் மரங்கள், செடி, கொடிகள் ஆகியவை தீயில் கருகி உள்ளன. வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் என மொத்தமாக 150 க்கும் மேற்பட்டோர் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் தேனி மாவட்டம் போடி வனப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிச்சாங்கரை, ஊத்தாம் பாறை வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னூர், பெரியூர் மலை கிராமத்தில் வனப்பகுதியில் தீப்பற்றக் காரணமாக இருந்த இருவர் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சின்னூர், பெரியூர் மலை கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவரும் ஆண்டவர் என்பவரும் விவசாய கழிவுகளை கொட்டி தீ வைத்தபொழுது தீ வனப்பகுதிக்கு பரவியது விசாரணையில் தெரிவந்துள்ளது. கோடைக்காலம் என்பதால் வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவது இயல்பான ஒன்று என கருதப்பட்டாலும் சிலரின் அத்துமீறலால் காட்டுத்தீ உருவாகும் சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.