Advertisment

சிறுத்தை நடமாட்டம்; 3 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்

Leopard movement; The tragedy of a 3-year-old child in nilgiris

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில், மேங்கோ ரேஞ்ச் பகுதியில் 3 வயது குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, சிறுத்தை ஒன்று, அந்த குழந்தையை அங்குள்ள தேயிலை தோட்டத்திற்கு இழுத்துச் சென்று தாக்கி சென்றுள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட அங்கிருந்தவர்கள், உடனே அந்த பகுதிக்கு உடனடியாக ஓடிவந்து படுகாயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அந்த குழந்தை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

Advertisment

ஏற்கனவே, 5 பேரை சிறுத்தை தாக்கிய நிலையில், தற்போது வடமாநில தொழிலாளியின் 3 வயது குழந்தை சிறுத்தை தாக்கி உயிரிழந்துள்ளது. இதனால், அங்குள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Cheetah nilgiris
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe