புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி. பட்ஜெட் கூட்டத்தை புறக்கணித்த இவர், தினகரன் புதிய அமைப்பு தொடக்க விழாவில் கலந்து கொண்டார். அதே போல் கள்ளக்குறிச்சி, விருத்தாச்சலம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ரத்தினசபாபதி எம்.எல்.ஏ. மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
நேற்றைய தினம் சட்டமன்றம் சென்னையிலும், மக்கள் மன்றம் மதுரை மாவட்டம் மேலூரிலும் கூடியது. இவை எல்லாமே ஒன்றுதான். மக்களின் எண்ணங்கள் சட்டமன்றத்தில் பிரதிபலிக்க வேண்டும்.
மக்கள் அனைவராலும் ஒரே மன நிலையுடன் ஏற்றுக்கொண்ட தலைவர் டி.டி.வி.தினகரன் மட்டுமே. தமிழகத்தில் அவரை மட்டுமே பலதரப்பட்ட மக்களும் பெரும்பான்மையாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இவ்வாறு கூறினார்.