Skip to main content

லெகின்ஸ் அணிந்து கல்லூரி பெண் விடுதிக்குள் புகுந்த பலே திருடன்! கதறிய மாணவிகள்...

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

 

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்ஏஎம் பொறியியல் கல்லூரி உள்ளது. வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படிக்கிறார்கள். கடந்த 27ஆம் தேதி அதிகாலையில் முதல் தளத்தில் உள்ள அறையில் ஒரு மாணவி கழிவறை செல்ல எழுந்த போது அறையின் கதவு திறந்து கிடந்தது, பொருட்களும் சிதறி கிடந்தது செல்போன் காணவில்லை தனது செல்போன் எங்கே என்று அவர் தேடத் தொடங்கினார்.

 

Trichy



அதன் பின்புதான் தெரிந்தது மற்ற மாணவிகளின் நகை, பணம், லேப்டாப் எல்லாம் மாயமாகி இருப்பது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.
 

அந்த அறையைத் தொடர்ந்து மற்ற அறைகளில் தங்கி இருந்த மாணவிகளும் தங்களின் பணம் நகை லேப்டாப் செல்போன் ஆகியவை காணவில்லை என கதறினார்.
 

மாணவிகளின் சத்தம் கேட்டு விடுதியின் பொறுப்பாளர் அங்கு வந்து விசாரித்தபோது 18 செல்போன்கள், 18 பவுன் நகை, 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் லேப்டாப் ஆகியவை திருடு போய்விட்டதாக 10 மாணவிகள் புகார் அளித்தனர்.
 

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. அடுத்த நாள் காலை 10 மணி அளவில் மாணவிகள் விடுதி பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது முதல் மாடியில் இருந்து லெக்கிங்ஸ் சேலை அணிந்த ஒர் உருவம் கீழே இறங்கி செல்வது தெரிந்தது. அந்த உருவத்தை கவனித்தபோது அந்த உருவம் ஆண் எனவும் மீசையுடன் இருந்தது என கண்டுபிடிக்கப்பட்டது.


 

 

எனவே மர்ம நபர் பெண் வேடமணிந்து மாணவிகள் விடுதிக்கு சென்று நகை பணம் செல்போன் லேப்டாப் ஆகிவற்றை திருடியிருப்பது தெரிந்தது. இதுகுறித்து சிறுகனூர் போலீஸ் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
 

இதற்கு இடையில் மீண்டும் கல்லூரிக்கு வந்த மாணவிகளை விடுதிக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அதிர்ச்சியடைந்த மாணவிகள் கல்லூரி வளாகத்திற்கு முன்பாக மறியலில் ஈடுபட்டனர். மாணவிகளின் இந்த போராட்டத்திற்கு மாணவர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரி நிர்வாகம் மாணவிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.


 

 

பேச்சு வார்த்தையில் மாணவிகள் நிர்வாகத்திடம் பெண்கள் விடுதிக்கு ஆண் ஒருவரை எப்படி விடுதி காப்பாளராக நியமிக்கலாம். அவரும் இரவு நேரங்களில் எங்கள் அறைகளை பூட்டிவிட்டு கல்லூரி வளாகத்தில் உள்ள மற்ற கல்லூரி கட்டிடங்களுக்கு தண்ணீர் மோட்டர் ஆன் பண்ணி விட சென்றால் மீண்டும் அதிகாலை தான் வருவார். அதுவரை நாங்கள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறோம். அதிகபடியான கண்காணிப்பு கேமிரா பொறுத்த வேண்டும், திருட்டு போன பொருட்கள் மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
 

இதை ஏற்றுக்கொண்ட கல்லூரி நிர்வாகம் சில நாட்களில் இதை எல்லாம் சரி செய்த பின்பு விடுதி திறக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.