Advertisment

கூடுதல் காட்சிகளை திரையிடும் திரையரங்குகள் மீது சட்டபடி நடவடிக்கை

ட்

அனுமதியின்றி கூடுதல் காட்சிகளை திரையிடும் திரையரங்குகள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

திரையரங்குகளில் வார நாட்களில் 4 காட்களும், விடுமுறை நாட்களில் 5 காட்சிகளும் திரைப்படங்களை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Advertisment

ஆனால் இந்த அனுமதியை மீறி விடுமுறை நாட்களில் காலை 5 மணிக்கு துவங்கி 6 காட்சிகள் வரை திரைப்படங்களை திரையிடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னையை தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, ஒளிபதிவு சட்டத்தை மீறி கூடுதல் காட்சிகள் திரையிடும் திரையரங்குகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டனர். மேலும் வரி ஏய்ப்பு செய்திருந்தால் அந்த திரையரங்கு எதிராக சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

theatre
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe