Skip to main content

''பொன்னு வெளையிற பூமி... இத விட்டுட்டு நாங்க எந்த ஆதரவில் வாழ்றது'' - வயலில் சாலை அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

Leaving this, on what support will we live' - Farmers protest against construction of road in arable land

 

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே விவசாய நிலங்களில் மண்ணைக் கொட்டி சாலை அமைக்கும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

தஞ்சை மாவட்டம் அரசூரிலிருந்து விளாங்குடி சாலை வரை 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கண்டியூர், கல்யாணபுரம், கீழ திருப்பந்துருத்தி உள்ளிட்ட பல கிராமங்களில் பச்சை பசேலென நெற்பயிருடன் காணப்படும் வயல்வெளிகளில் மண்ணைக் கொட்டி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது வரை இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைப் பணியானது நடைபெற்றுள்ளது.

 

Leaving this, on what support will we live' - Farmers protest against construction of road in arable land

 

தற்பொழுது காட்டுக்கோட்டை பாதை கிராமத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் வளர்ந்து நிற்கும் நெற்பயிர்கள் மீது மண்ணைக் கொட்டி சாலை அமைப்பதை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன் தலைமையிலான போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகள் கூறுகையில், 'பயிர் மேலேயே மண்ணைக் கொட்டி புறவழிச்சாலை அமைக்கிறார்கள். இதைத் தடுத்துக் கேட்டால் எல்லாவற்றுக்கும் செட்டில்மெண்ட் பண்ணியாச்சு என்கிறார்கள். இதுவரைக்கும் யாருக்கும் ஒரு நயா பைசா பணம் கூட கொடுக்கக் கிடையாது. முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை. பொன்னு விளையிற பூமி... இத விட்டுவிட்டு நாங்க என்ன செய்வோம். எந்த ஆதரவில் நாங்கள் வாழ்வது.ரொம்ப தண்ணீர் தேங்கும் இடம் இது. பக்கத்தில் உள்ள வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டால் நாளை இந்த இடம் எல்லாம் நீரில் மூழ்கி விடும்' என்று வேதனை தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் இந்தப் போராட்டமானது வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் அடிகளார்கள் போராட்டம்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
struggle at Trichy Srirangam

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி திருக்கோவில் ஆரியப்படாள் வாசல்  அருகே  கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் இச்சிலை கடந்த 2015 ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தால் நகர்த்தி வைக்கப்பட்டது. இதற்கு திருமால் அடியார் குழாம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட பெருமாள் அடியார் குழாமினர், அதன் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் பெருமாள் பண்ணிசைத்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.