Advertisment

“உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்த  வேண்டும்” - வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Lawyers struggle demanding Tamil as the language of litigation in the High Court

Advertisment

சிதம்பரம் நீதிமன்ற வாயிலில் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்த வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி எதிரே உள்ள நீதிமன்ற வாயிலில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்ட துணை செயலாளர் ஆழ்வார் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் கௌதமன், வைத்தியலிங்கம், செல்வகுமார், பெர்னாட்ஷா ஆகியோ முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர்கள் தயாநிதி, செந்தில், மணிவண்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்கள். இதில் வழக்கறிஞர்கள் ராஜவேல், பாலகுரு, சங்கர், அருண்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தமிழ் மொழியை நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அமல்படுத்த வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள்.

lawyers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe