Skip to main content

வறுமையில் வழக்கறிஞர்கள்! மூடப்பட்ட கோர்ட் பாதுகாப்புக்கு மாதம் 6 கோடி ரூபாய்!

Published on 31/07/2020 | Edited on 31/07/2020

ரோனா அச்சத்தால் கடந்த 125 நாட்களுக்கு மேலாக நீதிமன்றம் மூடப்பட்டிருப்பதால், வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2020 ஜூலை-24ந்தேதி வெள்ளிக்கிழமை தமிழகம் முழுக்க நீதிமன்ற வாயிலில் போராட்டங்களை நடத்தியது ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம்.

 

ll

 

அதன் மாநில செயலாளர் கு.பாரதியிடம் நாம் பேசியபோது, "தெலங்கானாவில் 25 கோடி ரூபாய், ஆந்திராவில் 15 கோடி ரூபாய் வழக்கறிஞர் மற்றும் குமாஸ்தாவின் நலனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு ஒரு ரூபாய்கூட ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டிலோ நான்கு மாதங்களுக்குமேலாக எந்த ஒரு வருமானமும் இல்லாததால் இளநீர் வெட்டுவது, கூடைபின்னுவது, ஃபாஸ்ட்ஃபுட்டில் வேலை செய்வது என்கிற அளவுக்கு வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டத்தில் வழக்கறிஞர் அருள் என்பவர் தற்கொலையே செய்துவிட்டார். இதனையெல்லாம், கருத்தில் கொண்டுதான் 3 லட்ச ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கவேண்டும், வழக்கறிஞர்களுக்கு மாதம் 15,000 ரூபாய், குமாஸ்தாக்களுக்கு மாதம் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கவேண்டும் எனப் போராட்டம் நடத்தினோம். அவசியமே இல்லாத டாஸ்மாக் கடைகள் முதல் அத்தியாவசிய கடைகள்வரை திறந்திருக்கும்போது நீதிமன்றத்தை மட்டும் திறக்காதது ஏன்?'' என்று கேள்வி எழுப்புகிறார்.

 

இதுகுறித்து, சென்னை வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான பால் கனகராஜ் நம்மிடம், "உயிர்பயம் என்பது எல்லா சூழல்களிலும் இருக்கும். அதற்காக, மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்திய கதையாக வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தையே அழிச்சுட்டு உயிர் வாழ்ந்து பிரயோஜனமில்ல. வீடியோ கான்ஃப்ரன்ஸிங் மூலம் ddசின்ன சின்ன வழக்குகளை சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக நடத்தலாமே தவிர, நெட்வொர்க் சிக்னல், பொருளாதார சிக்கல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்களால் முழுமையாக நடத்த முடியாது. வழக்கறிஞர்கள் வேறு தொழில் செய்யவும் சட்டப்படி தடை இருக்கிறது. அதனால், யாருக்கு வழக்கு இருக்கிறதோ அவர்கள் மட்டும் அனுமதிக்கப்படட்டும். தெர்மல் ஸ்கேன் வைத்து பரிசோதித்து அனுமதிக்கலாம். தனிமனித இடைவெளியோடு வழக்காடலாம்.

 

 

டிசம்பர் வரை கரோனா பாதிப்பு தொடரும் என்கிறார்கள். அதுவரை நீதிமன்றத்தை திறக்கவில்லை என்றால் 1 லட்சம் வழக்கறிஞர்களில் வறுமையால் வெறும் 15,000 வழக்கறிஞர்கள்தான் மிஞ்சுவார்கள். அதனால், பாதுகாப்பு மற்றும் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்து நீதிமன்றங்களை உடனடியாக திறக்கவேண்டியது நீதித்துறையின் கடமை'' என்கிறார் அழுத்தமாக.

 

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் மோகனகிருஷ்ணிடம் நாம் கேட்ட போது, "பாதுகாப்பு வசதிகளை செய்துவிட்டு விரைவில் நீதிமன்றம் திறக்கப்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். பார்கவுன்சில் நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறது'' என்றார்.

 

நீதிமன்றம் எப்போது திறக்கப்படும்? வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்திருக்கிறீர்கள்? என்று தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜிடம் நாம் கேட்டபோது, "நீதிமன்றங்களை திறக்கவேண்டும் என்று கடந்த மே மாதத்திலிருந்தே தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைப்பதோடு தீர்மானங்களையும் வைத்து தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கிறோம். நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், பார்கவுன்சில் உறுப்பினர்கள் தலா 1 லட்ச ரூபாய் கொடுத்த நிதியின் அடிப்படையில் மே 20 -ந்தேதி 4,000 ரூபாய் வீதம் 12,500 வழக் கறிஞர்களுக்கு நிவாரண நிதி கொடுத்துள்ளோம். ஆனால், இது தீர்வல்ல என்பதால், ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலோடு தனிமனித இடைவெளியோடு பாதுகாப்பாக திறக்கலாம் என்று கோரிக்கை வைத்தபோது மதுரை உயர்நீதிமன்றம் உட்பட 29 மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களை தற்போது திறந்தார்கள். ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் மட்டும் வீடியோ கான்ஃப்ரன் சிங்கில்தான் தொடரும் என்று சொல்லிவிட்டார்கள். இது, எங்களுக்கு பேரதிர்ச்சி.

 

மார்ச்-23 ந்தேதி ஊரடங்கு ஆரம்பித்ததும் ஏப்ரல் முதல் வாரத்திலேயே வழக்கறிஞர்களுக்கு மாதம் 20,000 ரூபாய் நிதியுதவி செய்யவேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கைவைத்து சட்டத்துறைச் செயலாளரிடம் நேரில் கோரிக்கை வைத்தேன். நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். ஆனால், 30 வயது இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் என்று சமீபத்தில் 1,000 வழங்கறிஞர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டிருக்கிறது.

 

1 லட்சத்திலிருந்து 3 லட்ச ரூபாய்வரை வழக்கறிஞர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனுக்கு கடிதம் எழுதி போராடி வருகிறோம். ஆனால், எல்லாவற்றிற்குமே தீர்வு சென்னை உயர்நீதிமன்றம் உட்பட நீதிமன்றங்களை திறப்பது தான்'' என்கிறார் தீர்மானமாக.

 

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இளங்கோவனோ, "ஒன்று, நீதிமன்றங்களை திறந்திருக்கவேண்டும். இல்லை யென்றால், நீதிமன்றம் திறக்கும்வரை மாதம் 6 கோடி ரூபாய் செலவிடப்படும் சி.எஸ்.ஐ.எஃப். பாதுகாப்பு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விலக்கப்பட்டு அதற்கு, நான்கு மாதங்களாக செலவிடப்பட்ட கோடிக்கணக்கான நிதியை வறுமையில் வாடும் வழக்கறிஞர்களுக்கு கொடுத்திருக்கவேண்டும்'' என்று கோரிக்கை வைக்கிறார்.

 

நீதிமன்றங்கள் திறக்கப்படவேண்டும் அல்லது அரசின் நிதித்துறை நிதியுதவி செய்ய வேண்டும்!
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி கொலை வழக்கு; நீதிபதி அதிரடி உத்தரவு

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
puducherry girl child incident Judge action order

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு புதுச்சேரி அரசு 20 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்திருந்தது. அதே சமயம் சிறுமியின் பெற்றோர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சந்தித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ள பா.ஜ.க. அமைச்சர் நமச்சிவாயம், குற்றவாளிகளுக்கு உதவிய போலீஸ் அதிகாரி மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும் சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முதலமைச்சர் ரங்கசாமியின் உறுதிமொழியை அடுத்து ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்த நிலையில், உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து உயிரிழந்த சிறுமியின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி  சிறப்பு புலனாய்வு குழு இன்று காலை முதல் விசாரணையை தொடங்கியுள்ளது. அதே சமயம் காவலர்கள் மீது எழுந்த புகாரை அடுத்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரும் கூண்டோடு மாற்றப்படுவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

puducherry girl child incident Judge action order

இந்நிலையில் சிறுமி கொலை வழக்கில் கைதான கருணாஸ் (வயது 19) மற்றும் விவேகானந்தன் (வயது 59) ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டிருந்தனர். இந்த சூழலில் வழக்கறிஞர்கள் இவர்கள் இருவரையும் தாக்க தயாராக இருந்ததால் நேரடியாக மத்திய சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து மத்திய சிறைக்குச் சென்ற நீதிபதி இளவரசன் விசாரணைக்குப் பின் இருவரை 15 நாள் காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். முன்னதாக சிறுமி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து பேரணி மேற்கொண்டு சட்டப்பேரவை அருகே ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இந்த பேரணியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில், தி.மு.க. காங்கிரஸ், வி.சி.க. கட்சி நிர்வாகிகள் என சுமார் 500 பேர் பங்கேற்றனர். 

Next Story

கர்நாடகா அரசைக் கண்டித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றம் ஆவின் கேட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.