Skip to main content

கோகுல்ராஜ் கொலை வழக்கு; பெற்ற அன்பளிப்பை ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்திற்கு வழங்கிய வழக்கறிஞர் ப.பா மோகன் ! 

Published on 04/04/2022 | Edited on 04/04/2022

 

Lawyer B.P. Mohan donates the gift to the Oppressed Right to Life Movement!

 

சென்னையில் சமத்துவ வழக்கறிஞர் சங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘சமூகநீதி வெல்லும்’ என கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த மூத்த வழக்கறிஞர் பா.பா. மோகனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழா சர். பி.டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது.

 

இந்த விழா விசிக கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தலைமையில், மூத்த தலைவர் அய்யா இரா.நல்லக்கண்ணு, சிபிஐ மாநிலத்தலைவர் கே. பாலகிருஷ்ணன், நீதிபதி அரிபரந்தாமன், திராவிட கழக அருள்மொழி, உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் தீபிகா சிவக்கொழுந்து, கு. பாரதி, விசிக பொ.செ. ரஜினிகாந்த், தோ.ம.ஜான்சன் ஆகியோர் கலந்துகொண்டு பாராட்டுக்களைத் தெரிவித்தனர். 

 

இதில் பேசிய வழக்கறிஞர் பா.பா. மோகன், “இந்த வழக்கில் வெற்றி பெற்ற உடன் மூன்று நபர்களை முதலில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவர்கள் நல்லக்கண்ணு, கி.வீரமணி, தொல். திருமாவளவன். இவர்கள் அனைவரும் முற்போக்கு சிந்தனை உடையவர்கள். அதனை நிலைநாட்ட வேண்டும் எனப் போராடுபவர்கள். இதில் நான் மட்டும் போராடியிருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியாது. என் பின்னால் இருந்த வழக்கறிஞர்களின் உழைப்பு தான் இந்த வெற்றி. எது என்னை வெற்றிபெறவைத்தது என்றால், உழைப்பை தாண்டி உண்மையை முன்னிறுத்தியதே. ஒரு ஆணும் பெண்ணும் பழகுவது என்பது அடிப்படை உரிமை. அந்த உரிமையை அழிப்பது எவ்வளவு கேவலமானது. மீண்டும் இரண்டாயிரம் வருடங்களுக்குப் பின்னால் கூட்டிச்செல்லும் வேலையைத்தான் இவர்கள் செய்துகொண்டு இருக்கிறார்களே தவிர முற்போக்கு காரியங்களை இவர்கள் செய்யப் போவதில்லை. இதை மாற்றவே நாம் அனைவரும் போராட வேண்டும்” என்றார். 

 

அதனைத் தொடர்ந்து ப.பா மோகனுக்கு விசிக சார்பாக வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாயை, அவர் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்திற்காக அய்யா நல்லக்கண்ணுவிடம் வழங்கினார். 

 

இதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “இந்த வழக்கை வெற்றிபெற வைத்த அய்யாவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோகுல்ராஜ் படுகொலை மற்ற ஆணவ படுகொலைகளைக் காட்டிலும் முற்றிலும் புதிதானது. ஆணவக் கொலைகளுக்கான வட இந்தியக் கலாச்சாரத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்திய போக்கு அது. இந்து பெரும்பான்மையை அணிதிரட்ட வெறுப்பு அரசியலைத் திணிக்கிறது ஆர்.எஸ்.எஸ். அதனை அப்படியே தமிழகத்தில் பின்பற்றுகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். வட இந்தியாவில் இஸ்லாமியர் வெறுப்பு அரசியலை முன்னெடுப்பது போல, தமிழகத்தில் தலித் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கிறார் ராமதாஸ். பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்று சனாதனத்திற்கு எதிராகப் போராடியதால்தான் இந்த பாராட்டு விழா. கருத்தியல் அடிப்படையில் ஒருங்கிணைய வேண்டும்” என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.