உ.பி. சட்டக்கல்லூரி மாணவியின் பாலியல் புகாருக்கு ஆளான முன்னாள் மத்திய அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தாவுக்கு எதிராக உ.பி. சட்டக்கல்லூரி மாணவி, பாலியல் குற்றச்சாட்டை கூறி வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்பத்தியது. இதையடுத்து அந்த மாணவியிடம் சிறப்பு புலனாய்வு விசாரணைக்குழு 11 மணி நேரம் விசாரணை நடத்தியது. சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் இக்குழுவினர் விசாரணை நடத்தினர். மேலும், சின்மயானந்தா கல்லூரிகளின் முதல்வர்களிடமும் விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சின்மயானந்தாவின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமடைந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்.