Skip to main content

உணவகத்தைப் போர்க் களமாக்கிய சிரிப்பு!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

The laughter that made the restaurant a battlefield!

 

சாப்பிடும் இடத்தை சண்டைக் களமாக்கிய சிரிப்பு சம்பவம் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் நடந்தது அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

 

இந்த நகரிலுள்ள பூங்கா ஒன்றில் ஒரு உணவகம் உள்ளது. நேற்றிரவு (22/09/2021) வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த அருண் குமார், பால்ராஜ், நாகராஜ், அஜித்குமார் உள்ளிட்டோரும், அடுத்து கிருஷ்ணாநகரைச் சேர்ந்த பிரசாத், முருகன், சிவராமன் ஆகியோரும் எதிரும் புதிருமாக அமர்ந்து உணவருந்தியுள்ளனர். அதுசமயம் அருண்குமார் வழக்கம் போல் தனக்குத் தெரிந்த அந்த ஹோட்டலின் சப்ளையரிடம் இயல்பாகவே சிரித்துப் பேசியிருக்கிறார். 

The laughter that made the restaurant a battlefield!

 

இவரின் சிரிப்பு எதிர் தரப்பில் சாப்பிட்டுக் கொண்டிருந்தப் பிரசாத்தை நோக்கியிருந்ததாகத் தெரிகிறது. இதனால் சூடான பிரசாத், அருண் குமாரைப் பார்த்து எங்களைப் பார்த்து ஏன் சிரித்தாய் என அருகில் சென்று கேட்க இரண்டு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, கைகலப்பு ஏற்பட்டதில் அருகிலிருந்த சேர், குழம்பு வாளி, தண்ணீர் சொம்பு ஆகியவைகளால் இரு தரப்புகளும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இரண்டு தரப்பு மோதலால் ஓட்டல் பரபரப்பாக அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அச்சத்தில் வெளியே ஓடியிருக்கிறார்கள்.

 

இவர்களின் மோதலால் அந்த உணவகம் சேதமானதுடன் போர்க்களம் போன்று காட்சியளித்தது. இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்ய, வழக்குப் பதிவு செய்த போலீசார் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வெளியாகியிருக்கும். இது குறித்த சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.