Skip to main content

காலதாமதமான பிரேதப் பரிசோதனை... பொது மக்களின் சாலை மறியலுக்கு பின்பு நடவடிக்கை! 

Published on 21/06/2021 | Edited on 21/06/2021
Late autopsy; Action after the public road blockade

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது செங்குறிச்சி. இந்த ஊரைச் சேர்ந்தவர் அழகப்பன் - சிவசக்தி (22) தம்பதியினர். இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது சாய் கிருஷ்ணா என்ற இரண்டு வயது குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், அழகப்பன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் அவரது மனைவி சிவசக்திக்கும் அவருக்கும் பலமுறை சண்டை நடந்துள்ளது. குடிப்பழக்கத்தைக் கைவிடுமாறு கணவரிடம் பலமுறை வலியுறுத்திவந்துள்ளார் சிவசக்தி. ஆனால் அழகப்பன் குடிப்பழக்கத்தைக் கைவிடவில்லை, வழக்கம்போல் நேற்றும் (20.06.5021) அழகப்பன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

 

இதனால் வீட்டில் கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மனம் வெறுத்துப்போன சிவசக்தி வீட்டிலுள்ளவர்கள் யாருக்கும் தெரியாமல் வீட்டில் தூக்குப் போட்டுக்கொண்டார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சிவசக்தியை மீட்டு உடனடியாக அவரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் சிவசக்தி திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்குள் இறந்துபோனதால் அவரது இறப்பு குறித்து கோட்டாட்சியர் அவர்கள் உரிய விசாரணை செய்து பிரேதப் பரிசோதனை செய்ய ஒப்புதல் சான்று அளிக்க வேண்டும். அதன்படி திருக்கோவிலூர் கோட்டத்தில்  இந்த ஊர் அமைந்துள்ளதால் அதன்படி திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய் வர்தினி முறைப்படி விசாரணை நடத்த வேண்டும்.

 

ஆனால், சிவசக்தியின் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில்  கொண்டு செல்லப்பட்டுள்ளதையடுத்து விழுப்புரம் கோட்டாட்சியர் சாய் வர்தினி விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ் அவர்களை விசாரணை செய்து பிரேதப் பரிசோதனைக்குப் பரிந்துரைச் சான்று அளிக்குமாறு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ், "திருக்கோவிலூர் கோட்டாட்சியர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். நான் பிரேதப் பரிசோதனைக்கு ஒப்புதல் அளிக்க முடியாது" என கூறி மறுத்துள்ளார். இரு அதிகாரிகளின் இந்த தட்டிக்கழிப்பால் பிரேதப் பரிசோதனை செய்வது காலதாமதமாகி உள்ளது. அதிகாரிகளின் இந்த தட்டிக்கழிப்பால் கோபமடைந்த சிவசக்தி உறவினர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் திரண்டு நேற்று மாலை 4 மணி அளவில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்குறிச்சி டோல்கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

தகவலறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அவர்கள் விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ் அவர்களை உடனடியாக பிரேதப் பரிசோதனைக்குப் பரிந்துரை செய்யுமாறு வாய்மொழி உத்தரவிட்டதையடுத்து நேற்று மாலை 5 மணி அளவில் விழுப்புரம் கோட்டாட்சியர் பரிந்துரை சான்றளிக்க அதன் பிறகு போஸ்ட்மார்ட்டம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு சாலை மறியல் செய்த பொதுமக்கள் மற்றும் சிவசக்தி உறவினர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். அகால மரணம் அடைந்த ஒரு இளம்பெண்ணின் உடலைப் பிரேத பரிசோதனை செய்து கொடுப்பதற்கு மருத்துவர்கள் காவல்துறையினர் முயற்சி செய்தும் வருவாய்த்துறையைச் சேர்ந்த கோட்டாட்சியர்கள் பரிந்துரைச் சான்று அழிப்பதற்கு தட்டிக்கழித்ததன் காரணமாக காலதாமதமானது. அரசு அதிகாரிகள் மிகுந்த பொறுப்புடன் தங்கள் பணியைத் திறம்பட செய்ய வேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு யார் அறிவுரை சொல்வது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.